Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

மொழி அரசியல்

(வெல்க தமிழ்!    இந்தி ஒழிக)

புரட்சி கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களுடைய மறைவு நாளில் இந்த பதிவை போடுவதில் பெருமை கொள்கிறேன். (நிதானமாக படிக்க ஆகும் நேரம் 08 நிமிடங்கள். )

If someone call themselves as Tamils and use the imaginary terminology, "Anti Hindi", just punch on their nose. Tamils are not adverse to any Hindi Aunty. We always maintain friendly relationship with all aunties (except actress) irrespective of their language. We start with friendship and move on to call as Bhabi / Didi.

Tamils are against any kind of "imposition" and not against any specific language. Whenever there is a wide spread discussion ; awareness ; planning to implement Tamil language at all levels in Tamil Nadu, Dravidian parties try to depict those efforts as actions against Hindi or any other language. They depict Tamils in bad light for their vested interests.


இந்தி எதிர்ப்பு என்ற கற்பனை சொல்லாடலை யாராவது பயன்படுத்தினால் அவர்கள் மூக்கில் இரத்தம் வருமாறு ஒரு குத்துவிடுங்கள்.

இங்கே நடந்தது & நடப்பது, திணிப்புக்கு எதிரான போராட்டம். அது என்றுமே நடக்கும். திரிவடுகர்கள், இதனை, ஒரு மொழிக்கு எதிரான போராட்டமாகச் சித்தரித்து வயிரு வளர்க்கிறார்கள். 

"வெல்க தமிழ்" என்பது சொந்த மொழி கொடுக்கும் 
ஆக்கபூர்வமான முழக்கம்.
"இந்தி ஒழிக" என்பது இரவல் மொழி கொடுக்கும் 
அழிவுப்பூர்வமான கோஷம்.

"திராவிட ஆட்சியின் மூலம் தமிழுக்கு நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்" என்று கேட்டால், "அரசு அலுவலர்கள் தமிழிலே கையொப்பமிடுகிறார்கள். அரசு அலுவலகங்களில் வாழ்க தமிழ் என்று நியான் விளக்கு மின்னச் செய்திருககிறோம்" என்று சொல்லுவார்கள். வேறு ஏதாவது என்று கேட்டால், "தமிழிலே பொறியியல் படிக்க ஏற்பாடு செய்திருக்கிறோம்" என்று சொல்லுவார்கள். சரி அதனைச் செய்ய அரை நூற்றாண்டு தேவைப்பட்டாதா? தமிழில் படித்தவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை என்று ஏன் அறிவிக்கவில்லை ; வேறு ஏதாவது ஆக்கப்பூர்வமான காரியங்கள் உண்டா என்று கேட்டால் திரு திரு என்று முழிப்பார்கள்.






இங்கே, தமிழர்களின் வளர்ச்சியில் தடை ஏற்படுத்த ; தமிழர்களின் மனதை மடைமாற்றம் செய்ய நம் பகைவர்கள் இரண்டு வழிமுறைகளை  கையாளுகிறார்கள். 

முதலாவது :

சில வாரங்களுக்கு முன்பு நடிகை Kasthuri பேசிய காணொளி ஒன்றை நாம் தமிழர் கட்சியை சார்ந்த / அனுதாபிகளான எளிய பிள்ளைகள் (Rathish போன்று) பலரும் பகிர்ந்திருந்தார்கள்.

அந்த காணொளியில், அவரின் தொழில் குறித்து பல விடயங்களை பேசியிருந்தார். திரு. Netaji அவர்கள் குறித்தும், திரு. பிரபாகரன் குறித்தும் உயர்வாக பேசியிருந்தார். இந்த காரணத்தால், அவருடைய காணொளியை பலரும் பகிர்ந்திருந்தார்கள். அடுத்த வாரத்தில், நாட்டை ஆளும் தகுதி நடிகர்களுக்கு உண்டு என்று பேசினார்.


கலைஞர் கருணாநிதியும் அப்படித்தான் தமிழின் பெருமையை தமிழனின் அருமையை பேசுவார். இதன் மூலமாக ஒரு நேர்மையான பிம்பத்யை கட்டமைத்தார். ஆனால் ஆக்கப்பூர்வமாக எதையும் செய்யமாட்டார்.

தமிழ் Hindu நாளிதழை துவக்கியது எதற்க்காக? தமிழ் மீதான பற்றா? கண்டிப்பாக இல்லை. ஆங்கில செய்தித்தாள் சந்தையில் ஒரு பின்னடைவு. தமிழுக்கு ஒரு சந்தை உருவாகி விட்டது அதனை பயன்படுத்த வேண்டும். தமிழர் என்று அடையாளப்படுத்தி தமிழர் கூட்டத்தை சேர்த்து அதன் மூலமாக நுழைந்து தமிழிலேயே தமிழ் விரோத கருத்துக்களை விதைத்து மடைமாற்றம் செய்ய வேண்டும்.

தருண் Vijay ஏன் தமிழ் குறித்தும் திருக்குறள் குறித்து பேசினார்? திருவள்ளுவர் சிலையை வடநாட்டில் நிறுவ முனைந்தது எதற்க்காக. அவர் குறித்த நேர்மறையான எண்ணத்தை ஏற்படுத்தி தன்னை நிறுவி ; பின்னர் தனக்கு பின் சேர்ந்திருக்கும் தமிழரை வைத்தே தமிழரின் அழிவுக்கு வழி செய்வார்.

இரண்டாவது :

மற்றுமொரு வழி முறையும் பின்னப்பற்றப்படுகிறது. அது தான் Manushyaputhran வழி. பல சம்பவங்கள் மூலமாக தொடர்ச்சியாக மக்கள் மனதில் எதிர்மறையாக இடம் பிடிப்பார். திடீரென்று ஒருநாள் தமிழர் நலன் குறித்து சரியான கருத்து ஒன்றை முன்வைப்பார். அவரை காரணம் காட்டி ; அவர் மீது இருக்கும் எதிர்ப்பு மன நிலையை பயன்படுத்தி அவர் சொன்ன கருத்து தவறு என்று அவருடைய ஆட்களே தங்களை தமிழராக அடையாளப்படுத்தி இரு அணிகளாக பிரிந்து நின்று விவாதம் செய்வார்கள். தமிழர்கள் வாய் பிளந்து கேட்க வேண்டும்.

"தமிழர் ஆட்சி அமைய வேண்டும். எல்லா நிலையிலும் தமிழ் நிலைக்கவேண்டும்" என்று நாம் சொன்னால், உடனே முன்னிலையாவார் ஒருவர். "மொழி அரசியல் மூலமாக ஆட்சியை பிடித்த கருணாநிதி & திராவிடர்கள் கும்பல் தமிழ் வளர்ச்சிக்கு என்ன செய்தார்கள்? இப்படி பேசி பேசி வீணாக வேண்டாம் இந்தி படித்தாலாவது மத்திய அரசு வேலைக்கு போகலாம்". அந்த ஒருவர், திராவிடர்களின் கள்ளக்காதலரான ஆரியர் என்பதனைச் சொல்ல வேண்டியதில்லை.

இங்கே யாரும் இந்தி படிப்பதை தடுத்து நிறுத்தவில்லை. யாருக்கெல்லாம் படிக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ அவர்கள் எல்லாரும் படிக்கலாம். முரசொலி  
மாறனின் பிள்ளைகள் இந்தி படித்தது அவ்வண்ணமே. 

தமிழை மையமாக வைத்து நடக்கும் எந்த ஒரு விவாதத்தையும் இந்தி மொழியை மையமாக கொண்ட விவாதமாக மாற்ற வேண்டிய கட்டாயம் Stalin வகையறாக்களுக்கு இருக்கிறது. அதற்கான காரணம் என்ன?


சில விடயங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

1) BJP போன்ற கட்சிகளின் Hindi heart land ஆட்சி போதைக்கு இந்தி மொழி பேசுபவர்கள் & தமிழர்கள், நொறுக்குத்தீனி & ஊறுகாயாக பயன்படுத்தப்படுகிறார்கள். வணீக நிறுவனங்களில் அதிகம் பேசப்படும் Pareto கோட்பாட்டின்படி இந்தி மொழி பேசுபவர்களிடம் மொழி அரசியல் செய்வதை விட தமிழர்களிடம் செய்தால் நமக்காக அவர்கள் உழைப்பர்கள். தமிழர்களின் வாக்குகளை துறந்தால் இந்தி மொழி பேசுபவர்களின் வாக்குகளை எளிதாக பெற்றுவிடலாம் என்று கணக்கு போட்டு வட இந்திய கட்சிகள் காய் நகர்த்துகிறார், அதற்க்கு கருணாநிதி ; வை.கோ. போன்றவர்கள் சேவகம் செய்கிறார்கள்.

2) தமிழ் என்பது கருணாநிதி ; வை.கோ. ; EVKS இளங்கோவன் போன்றோர்களுக்கு இரவல் மொழி. எப்படி தங்கள் தாய் மொழியான தெலுங்கை துறந்து இரவல் மொழியான தமிழையும் ஆங்கிலத்தையும் ஏற்றுக்கொண்டார்களோ அது போலவே மற்ற இரவல் மொழிகளான இந்தி அல்லது வேறு மொழியை ஏற்றுக்கொள்வதில் எந்த சிக்கலோ தயக்கமோ இருக்காது. யாரும் கோபமடைய தேவை இல்லை. வேறு மாநிலங்களுக்கு புலம் பெயர்ந்த தமிழர்களுக்கும் இது பொருந்தும்.

3) இங்கே நடந்த மொழிப்போரில் இறந்தவர்கள் அனைவரும் தமிழர்கள். ஆனால் அதைவைத்து ஆதாயம் அடைந்தவர்கள் (கருணாநிதி ; வை.கோ. ; மாறன்) யாரும் தமிழர்கள் கிடையாது. தந்தை கருணாநிதியும் மாமா மாறனும் செய்ததை
இப்போது  Stalin. செய்யப்பார்க்கிறார். அதன் முன்னோட்டம் தான் தமிழன்டா கோஷங்கள் எல்லாம்.


சேட் & மார்வாடிகள் எப்போதுமே போரில் ஈடுபடமாட்டார்கள். போருக்கான பொருளாதார உதவி மட்டும் செய்வார்கள்.

Stalin சார்பாக மொழிப்போருக்கு அழைப்பு வரும். வராதவர்களை தமிழர்கள் கிடையாதென்றும் மானம் கெட்டவர்கள் என்றும் ஏசுவார்கள்.

இந்த முறை, எளிய தமிழ் பிள்ளைகள் உயிரின் விலை அறிந்து ; ஏமாறாமல் விலகி நிற்க வேண்டும்.

OPS தமிழரா ?

OPS தமிழரா என்ற சூடான விவாதம் நடைபெறுகிறது.


OPS விடயத்துக்கு போகும் முன்... நவீன் பட்நாயக் மற்றும் கருணாநிதி ஆகியோரை பற்றி ஒரு நிமிடம் யோசித்துப் பார்த்தால் உண்மை விளங்கும்.
நவீன் பட்நாயக் அவர்களுக்கு, அவர் ஆளும் மாநிலத்தின் ஆட்சி மொழியில் புலமை கிடையாது (ஒரியா). ஆனால் அந்த மாநிலத்து மக்களுக்கு உண்மையாக இருக்கிறார். இங்கே கருணாநிதி அவர்களுக்கு அவர் வாழும் மாநிலத்தின் ஆட்சி மொழியில் புலமை உண்டு ஆனால் மக்களுக்கு உண்மையாக இருக்கிறாரா என்றால் இல்லை என்ற பதில் தான் அவருடைய வாரிசுகளிடமிருந்தே வரும்.  




மொழிப்புலமை என்பது அவசியம் என்றாலும் கூட, உயர்வு வேண்டுமென்றால் தூய குருதியும் உணர்வும் வேண்டும்.

திரிவடுக கட்சிகளில் இருக்கும் எவருக்கும் அந்த உணர்வு இருக்க முடியாது. கட்சி ; தலைமை என்ற உணர்வே மேலோங்கி இருக்கும். "என் உயிர் தோழன்" படத்தில் வரும் தொண்டனைப்போல.

இருந்தாலும் கூட, அ.தி.மு.க. வில் இருப்பவர்களை ஏன் தமிழர்கள் என்று சொல்லுகிறோம்?

என்னுடைய தெரிவு யார் என்றால், முதல்வர் பொறுப்புக்கு திரு. Jayakumar. சுனாமி சமயத்தில், இறங்கி வேலை செய்ததால் இவரை சொல்லுகிறேனா? இல்லை. இவரால் கட்சிக்கு ஒரு தேர்தலில் வெற்றி பெற்று தர முடியுமா என்றால், சந்தேகம் தான்.

ஆனால், இவர் வந்தால், மீனவர் விடயத்தில் தீர்க்கமான ஒரு முடிவை எடுப்பார் என்ற திடமான நம்பிக்கை இருக்கிறது. கடிதங்கள் எழுதிக்கொண்டிராமல் காலத்தில் நிச்சயம் குதிப்பார். ஒருவேளை மீனவர் யாராவது தவறு செய்தால் உரிமையோடு கடிந்து அவர்களை வழி நடத்துவார்.


கட்சி பணிக்கு / பொதுச்செயலாளர் பணிக்கு, திரு. செங்கோட்டையன் அவர்கள் சிறப்பான தேர்வாக இருக்கும். ஒருங்கிணைக்கும் பணியில் தேர்ந்தவர் என்ற காரணத்தினால் தான் தேர்தல் பரப்புரைகளுக்கான திட்டமிடும் பொருப்பு இவர் வசம் பல முறை வந்தது.


சரி நத்தம் ; தம்பிதுரை ; பொன்னையன் போன்றவர்கள்? அவரவர் வியாபாரத்தை அவரவர் கவனித்துக் கொண்டு இருப்பது நலன் பயக்கும்.

சரி மீண்டும் தலைப்புக்கு வருவோம். எந்த அடிப்படையில் இவர்களை நம்புவது அல்லது தமிழர்கள் என்று ஏற்றுக்கொள்வது? இதற்கான பதிலை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சில வருடங்களுக்கு முன்னர் சொல்லி இருக்கிறார்.

2001 ஆம் ஆண்டு பொது தேர்தலில் "இலை மலர்ந்தால் ஈழம் மலரும்" என்று சொன்னார். இன்றைக்கு கேட்கப்படும் எல்லா கேள்விகளையும் அன்று கவிதாயினி தாமரை எழுப்பினார்.

செல்வி Jayalalithaa, ஈழ போராட்டத்துக்கு எதிரானவராயிற்றே அவரை எப்படி நம்புவது?

பன்நெடுகாலமாக கருணாநிதி, தமிழின தலைவர் வேடத்தை பூண்டிருந்தார். இன்றைக்கு அந்த வேடத்தை தரிக்க, அன்று செல்வி. JJ தயாரானார். கொள்கை முரண்பாடு இருந்த போதும் அவர் அந்த முடிவை எடுக்க காரனம் என்ன?

1) புலிகளை வீழ்த்திவிட்டோம்.
2) கருணாநிதி மீதான நம்பகத்தன்மை சிதைந்து விட்டது.
3) ஈழத்துக்கான சந்தை அப்படியே இருக்கிறது. அதை பயன்படுத்திக்கொள்ளலாம்.

சரி 2011 தேர்தலில் வென்றபின் பழைய குருடி கதவை திரடி என்று இருந்திருக்க முடியும். ஆனால் அப்படிச் செய்யவில்லை. அதற்கு காரனம் என்ன?

1) MGR க்கு மக்களிடம் தலைமுறைகள் தாண்டி நிரந்தர செல்வாக்கை பெற்றுத்தந்தது ஈழம் தானே. நாமும் உண்மையாக நடந்துகொண்டால் நாம் நிரந்தர முதல்வராக இருக்கலாம்.

2) அகவை 60 கடந்துவிட்டோம் இனிமேலாவது, பரிவானவர் இவர் என்ற பெயர் எடுக்க ஆசைபட்டிருக்கலாம். புண்ணியம் தேடலாம் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கலாம்.

3) அதோடு சேர்ந்து, யாருமற்ற நம்மீது இவ்வளவு பரிவு காட்டுகிறார்களே. நாமும் பரிவு காட்டலாம் என்ற என்னமும் வந்திருக்கலாம்.

தூய்மையான அன்பும் பரிவும் ஒரு மனிதனை நல்வழிப்படுத்த முடியும்.

கோமாளி புலிக்கேசி ஒருகட்டத்தில் உணருவது போல, அ.தி.மு.க. வில் இருக்கும் இவர்களும் உணருவார்கள் என்ற எண்ணம் தான் இவர்களை இன்றைக்கு ஆதரிக்க நமக்கு இருக்கும் காரணமாக இருக்க முடியும்.

இப்போது இருக்கும் வாய்ப்பையும் தவர விடுவதில் நியாயம் இல்லை. உள்ளத்தூய்மையும் உறுதியும் கொண்ட ஒரு முழுமையான ஒரு தமிழன் / தமிழச்சி தலைமை பொறுப்புக்கு வரும் வரை வேறு வழிகள் எனக்கு தென்படவில்லை.

தேர்தலில் தோல்வியை தழுவிய பிஜேபி மற்றும் திரிவடுக காட்சிகள் இப்போது கொல்லைப்புறமாக அதிகாரத்தை கைப்பற்ற சூழ்ச்சி செய்கிறார்கள். அவர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் என்ற கேள்வி உங்களுக்கு வருமேயானால்...

நெடுஞ்செழியன் ; திருநாவுக்கரசு ; STS ; பண்ருட்டியார் ; இராம. வீரப்பன் என்று பலரையும் தாண்டி தான் செல்வி JJ இங்கு காலூன்றினார். நாம் ஒன்றும் கர்நாடகத்துக்கு சென்றோ அல்லது ஆந்திராவுக்கு சென்றோ யாரிடமிருந்தும் எதையும் தட்டிப்பறிக்கவில்லை.

தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 56

தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 56

வாழ்க வளமுடன்!

இந்த தொடருக்கு மாற்று கருத்து மூலமும் ; விருப்பங்கள் / பகிர்வுகள் வாழ்த்துகள் மூலமாகவும் ஆதரவு நல்கிய அனைவருக்கும் நன்றி. யார் விருப்பம் தெரிவிக்கிறார்கள் யாரு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்று பார்த்து எந்த இடத்திலும் இந்த தொடரின் போக்கையோ அல்லது கருத்தாக்கத்தையோ மாற்றிக்கொள்ள வில்லை. பிறந்தநாள் பார்த்து வாழ்த்து சொல்லுவது / உங்கள் பதிவுகளுக்கு ஆதரவு தெரிவித்து என் பதிவுக்கு ஆதரவு பெறுவது என்று எந்த வேளையிலும் நான் ஈடுபடவில்லை.  

இந்த தொடரை நிறைவு செய்யும் தருவாயில் ஒரு விடயத்தை மட்டும் வலியுறுத்த விரும்புகிறேன். திராவிட கட்சிகளுக்கு உங்கள் பொன்னான வாக்குகளை போட்டு வீணடிக்காதீர்கள்.  அந்த பாதக செயலை செய்தால் அதனால் ஏற்ப்படும் 
சீரழிவானது பல தலைமுறைக்கும் இருக்கும்.  எதனால் இதனைச்  சொல்லுகிறேன்? 
தமிழர் நலன் ; தெலுங்கர் நலன் ; குடும்பத்தார் நலன் என்று இல்லை யாருடைய நலன் குறித்தும் அவர்களால் சிந்திக்க முடியாத சுயநலம் மட்டுமே அவர்களிடம் உள்ளது. முதலில் காமராசரை  நாங்கள் தான் முதல்வர் ஆகினோம் என்று சொல்லுவார்கள் ; தமிழர்கள் ஒன்று கூடினால் காமராசர் எல்லாம் ஒரு ஆளா என்று கேட்ப்பார்கள்.

"E.V.ராமசாமி யை மட்டும் விமர்சனம் செய்கிறீர்களே ஏன் காமராசர் குறித்தும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குறித்தும் விமர்சனங்கள் வைப்பதில்லை" என்று தமிழ் தேசியம் பேசுபவர்களை பார்த்து கேட்கிறார்கள் திரிவடுகர்கள்.

அப்படி பேசினால் அவர்கள் பிறந்த சாதி ஓட்டுக்களை இழக்க நேரிடும் அவர்களை விமர்சனம் செய்தால் வாயிலேயே குத்துவார்கள். இப்படி அவர்களாகவே காரணம் சொல்லுகிறார்கள் திரிவடுகர்கள்.

காரணம் வேறு ஒன்றும் இல்லை. வோட்டு அரசியலுக்காக ஒருவரை புகழ்வது. பின்னர் அதே தலைவரை பார்த்து இகழ்வது என்ற மனநிலை உடைய திரிவடுகர்களுக்கு யார் என்ன செய்தாலும் நம்மைப் போலவே மற்றவர்களும் நாடகமாடுகிரார்களோ என்ற சந்தேகம் வருகிறது.

முகவை மாவட்டம் தந்த முத்துக்கள் எம் தலைவர்கள். திரிவடுக சேர்க்கையால் தான்  திரு. காமராசர் பல தவறான முடிவுகள் எடுத்தார். இல்லை என்றால் விடுதலை போரிலே சொக்கத் தங்கமாகவே இருந்தார். திரிவடுகரகளின் சகவாசம் இருந்த போதும் கடைசிவரை தனக்கென சொத்து சேர்க்காததே பெரிய சாதனை தான். 

திராவிட இயக்கங்களால் மக்களை துண்டாட மட்டுமே  முடியும். இனியும் கலகமூட்டுபவர்களின் வலையில் விழ மாட்டோம் என்று சூளுரைப்போம்.

வளர்க வையகம்!

தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 55

தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 55

தேர்தல் விதிமுறைகளின் படி இன்றோடு தேர்தல் பரப்புரைகளை முடித்துக்கொள்ள வேண்டும். 1962 ஆண்டு நடந்த தேர்தல் பரப்புரையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்கள் பேசிய பேச்சு இன்றும் பொருந்துவதாக இருக்கிறது. அதில் சில பகுதிகள் மட்டும் இங்கே.

ஓட்டுப் போடுகிற வகையில் மக்கள் எதையும் எதிர்ப்பார்க்காதீர்கள். அது மகா பாவம். ஒரு கிராமத்தில் முளைக்கொட்டு என்றால் இரண்டு ரூபாய் எடுத்துக்கொண்டு போய்ப் பார்க்கிறீர்கள். ஜல்லிக்கட்டு என்றால் நாலு ரூபாய் எடுத்துப் போய் வேடிக்கை பார்த்து வருகிறீர்கள். சினிமாவுக்கு ஐந்து ரூபாய் செலவிட்டுப் போய் பார்க்கிறீர்கள். ஆனால், தேர்தலில் ஓட்டுப்போடுவதற்கு மட்டும் யாராவது பணம் தருவார்களா என்று எதிர்பார்க்கலாமா?

உங்கள் தலைவிதியை ஐந்து வருடங்களுக்கு ஒப்புவிக்கும் ஒரு கடமை அல்லவா ஓட்டுபோடுவது! காசுக்காக காத்திராமல் நமது சொந்த தேசிய திருவிழாவுக்காக என்று நினைத்து கொண்டு, அவரவர் வசதி, சக்திக்கு தக்கவாறு சொந்த பணத்திலிருந்து இரண்டோ மூன்றோ எடுத்துப்போய் செலவிட்டு ஓட்டுப்போடுங்கள். அதுதான் நல்ல மக்களுக்கு அடையாளம். 

இன்றைய தேர்தலில் ஒட்டு போடுவது மட்டும் நம் கடமை அல்ல ; இருட்டில் வந்து நம் வீட்டின் முன் பணத்தை போட்டு செல்லும் கட்சிக்காரர்களின் பணத்தை எடுத்து தேர்தல் ஆணையம் மூலமாக அரசாங்க கருவூலத்தில் சேர்க்க வேண்டியதும்  நம் கடமை தான்...  

தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 54

தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 54

மாநில கட்சிகள் / தமிழர் கட்சிகள் :

சிலம்புச் செல்வர் திரு. ம.போ.சி. அவர்கள் "தமிழரசுக் கழகம்" என்கிற இயக்கத்தை நடாத்தினார். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, தமிழக எல்லைகளை தாராளமாக அடுத்தவர்களுக்கு விட்டுக்கொடுத்தது காங்கிரஸ். இன்றைக்கு தமிழகத்தோடு பல பகுதிகள் இருப்பதற்கு முக்கிய காரணம் இவரும், திரு நேசமணி அவர்களும் என்று சொன்னால் மிகையாகாது.

அண்மையில் கூட, தமிழக கோட்டாவில் மைய அமைச்சராக இருக்கும் திரு. பொன் ராதா கிருஷ்ணன் அவர்கள் தமிழகத்தோடு இருக்கும் சில பகுதிகள் கேரளாவோடு இருந்திருக்கலாம் என்ற கருத்தை வெளியிட்டிருந்தார். பதவிக்கு வரும் வரை தமிழராக இருப்பவர்கள், பதவிக்கு வந்தவுடன் கேரளத்துக்காரர்கலாக ஆகிவிடுகிறார்கள். 

ம.போ.சி. அவர்கள் கூட தன்னுடைய அகவை 50 ஆனத்துக்கு பிறகு தடம் புரண்டுவிட்டார் என்று தெரிய வருகிறது. 

ஓய்வு பெற்ற IAS அதிகாரி மலைச்சாமி அவர்கள் ஒரு அரசியல் கட்சியை துவக்கி நடத்தினார். தேர்தல் கூட்டணி குறித்து பேச்சு வரும் போது அந்த கட்சியை கலைத்துவிட்டு அதிமுகவில் சேர்ந்தால் கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிடலாம் என்று ஒரு நிபந்தனை வைக்கப்பட்டது, அ.தி.மு.க. வில் ஐக்கியமானார். மறுபுறம், இடையில், திரு ஜகத்ரட்சகன் (ஜனநாயக முன்னேற்ற கழகம்) ; இப்படி நிறைய பேர். இப்படியாக தமிழர் கட்சி எதுவா இருந்தாலும் கலைச்சிட்டு, திரிவடுக / தேசிய கட்சில இணையனும். இல்லைனா அந்த கட்சிய சாதி கட்சினு சொல்லுவாங்க.

பா.ம.க. ~ இந்த கட்சியை துவங்கியது வன்னிய சமுதாய பெரியவர்கள் மட்டும் இல்லை. மருத்துவர் ராமதாசுக்கு நண்பர்களாக இருந்த பல சமுதாயத்தை சார்ந்தவர்களும் சேர்ந்து துவக்கினார்கள்.

வகை மாதிரிக்கு சொல்லுவதென்றால், திரு. பொன்னுசாமி மற்றும்  
திரு. தலித்.ஏழுமலை ஆகியோர் மைய அமைச்சராக பா.ம.க. சார்பாக இருந்துள்ளார்கள். 

பொது இடங்களில் புகை பிடிகுறது இப்ப இல்லவே இல்லன்னு சொல்ல முடியாது ஆனா, பல பேருக்கு இப்ப ஒரு விழிப்புணர்வு வந்திருக்கு; நிறைய குறைஞ்சிருக்கு. மதுவுக்கு எதிரா தொடர்ந்து போராட்டங்களை  முன்னெடுக்கிறது. 

ஆனால் இந்த கட்சியின் முதல்வர் வேட்பாளர் இன்னும் பக்குவப்படவில்லை. சில விரும்பத்தகாத பிரச்சனைகள் என்று வருகின்றபோது வட மாவட்டங்களை விட இந்த பிரச்னை தென் மாவட்டங்களில் அதிகம் என்று மாநிலத்தின் ஒரு பகுதியை மட்டும் பிரதிபலிக்கிறார். மாநிலத்துக்கே பொதுவானவராக செயல்பட முடியுமா என்று தெரியவில்லை. ஒரு வேலை மற்ற மாநிலங்கள் பிரிக்கப்பட்டது போல தமிழகமும் என்றாவது பிரிக்கபட்டால் அந்த மாநிலத்துக்கு முதல்வர் ஆகலாம், தற்பொழுது இருக்கும் மாநில அமைப்பில் தன்னால் முதல்வர் ஆக முடியாது என்கிற புரிதலாகவும் இருக்கலாம். மாம்பலம் என்பது குறிப்பிட்ட சில மாவட்டங்களில் விளையக்கூடியதாக இருக்கிறது...  

ஆனால் இந்த தேர்தலுக்காக அதிகம் உழைத்தவர்கள் என்றால் இந்த கட்சியைதான் சொல்ல முடியும். வரைவு தேர்தல் அறிக்கையை தாக்கல் செய்ததில் இருந்து எவ்வளவோ... ஒவ்வொரு வருடமும் நிழல் நிதிநிலை அறிக்கை தயார் செய்கிறார்கள். மாநிலம் முழுவதும் சுற்றுபுறம் செய்ததன் மூலமாக மருத்துவர் அன்புமணிக்கு நிச்சையம் நல்ல பாடம் கிடைத்திருக்கும். இந்த அனுபவமும் G.K. மணி ; மருத்துவர் ராமதாசு ; செந்தில் போன்றோரின் வழிகாட்டுதலும் இவரை சரியான பாதையில் இட்டு செல்லும் என்று நம்பிக்கை இருக்கிறது. இந்த தேர்தலில் இந்த கட்சியின் வாக்குகளும் வெற்றி பெரும் இடங்களும்  நிச்சையம்  அதிகரிக்கும். ஒரு வேலை தொங்கு சட்டமன்றம் உருவானால் பா.ம.க. வின் பங்கு நிச்சையம். மைனாரிட்டி அரசு ஆட்சி அமைத்தால் நிச்சையம் பா.ம.க. வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கும்.

அதுபோலவே இயக்குனர் நடிகர் சீமான் கட்சி கூறும் கருத்துக்கள்  பல நேரங்களில் சரியாக இருந்தாலும் கூட, சினிமாவில் இருந்து வரும் ஒருவரை மீண்டும் ஏற்கும் மன பக்குவம் "எனக்கு" இல்லை. மீண்டும் ஒரு விசிலடிச்சான் கூட்டத்தை...வேண்டாம்... விரைவில் சீமான் இல்லாத கட்சியாக அது உருபெறும் என்பது என் கணிப்பு...இந்த தேர்தலில் நிறைய  ஓட்டுக்களும் இடங்களும் இந்த கட்சிக்கு கிடைத்தால் தமிழகத்துக்கு நல்லது... அடுத்து வரும் ஆண்டுகளில் களத்தை விட்டு விலகாமல் தொடர்ந்து உத்வேகத்தை தக்கவைத்தால் தமிழகத்துக்கு நல்லது...

இவர்களை தவிர்த்து சிலர் சுயேச்சைகளாக இந்த தேர்தலில் போட்டியிடுகிறார்கள். அவர்களில் சிறந்தவர்களுக்கு ஒட்டு போடலாம். மற்ற கட்சிகளில் உள்ள வேட்பாளர்களில் யாரால் சுயமாக சிந்தித்து ; கட்சி தவறான முடிவை எடுத்தாலும் அதனை எதிர்த்து மக்களுக்காக செயலாற்ற கூடியவர்களாக இருக்கிறாரோ அவருக்கு வாக்களிக்கலாம்...

கடைசியா ஒரு அடிப்படை வேறுபாடு என்னனா, தங்கள் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் தொகுதிகளை விட்டு கொடுத்துவிட்டு தோற்கும் தொகுதியில் நிற்கும் கட்சி, தமிழர் கட்சி. தனக்கு தோல்வி உறுதி என்ற தொகுதிகளை மற்றவர்களுக்கு கொடுத்துவிட்டு மற்றவர்களுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் தொகுதிகளையும் சேர்த்து நிற்கும் கட்சி தான் திரிவடுக / தேசிய கட்சிகள்.




தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 52

தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 52

கேரளத்திலும் ஆந்திரத்திலும் ஏன் திராவிடவாதம் இல்லை?

திராவிட இனவாத சித்தாந்தம் என்பது பல்வேறு மொழி,சாதிபேதங்கள் கொண்ட பிராமணரல்லாதார் அனைவரும் பிராமணர்களுக்கு எதிராக ஒருங்கிணைவதற்கான ஒரு பொது அடையாளமாகவே முன்னெடுக்கப்பட்டது. கேரளாவில் நாயர்களும் ; ஆந்திரத்தில் ரெட்டிகளும், பிராமணர்களிடம் இருந்த மேலாதிக்கத்தை உடைத்து அதிகார பீடத்தை பிடித்தார்கள் அதனால் அங்கே திராவிடவாதம் இல்லை என்று எழுத்தாளர் ஜெயமோகன் கூறுகிறார். 

அவர் மேலும் சொல்லுகிறார், "பிராமணரல்லாத உயர்சாதியினரான நாயர்களும் ரெட்டிகளும் ஜனநாயக அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளுமளவுக்கு எண்ணிக்கை பலமும் கொண்டவர்கள் என்பதை கவனிக்கவேண்டும். தமிழ்நாட்டில் அப்படி அல்ல நிலைமை. பிராமணரல்லாத உயர்சாதியினர் எண்ணிக்கைபலமற்றவர்கள்."

ஒருவேளை  இவர் சொல்லுவது போல பிராமணரல்லாதார் ஆட்சியை பிடிப்பதற்கான இயக்கம் என்றால் கேரளா ஆந்திரா கர்நாட்டகா போலவே தமிழகத்தில் பலகாலமாக பிராமணர் அல்லாத  அரசு தானே இருந்தது (காமராசர் to கருணாநிதி). இருந்தாலும் அந்த இயக்கம் தமிழத்தில் ஏன் மறைய வில்லை.

ஆந்திரத்தில் ரெட்டிகளுக்கும் கேரளத்தில் நாயர்களுக்கும் இருந்தது போன்ற எண்ணிக்கை பலம் தமிழ் நாட்டிலும் கர்நாடகத்திலும் இருந்த பிற்ப்படுத்தபட்டவர்களுக்கு இல்லை என்ற வாதம் சரி என்றால் கர்நாடகத்தில் ஏன் அந்த திராவிட வாதம் புறம்தள்ளபட்டது.

ஆந்திரத்திலும் ; கேரளத்திலும் ; கர்நாடகத்திலும் பூர்வ குடிகள் மற்றும் அயலவர்கள்  ஆகியோருக்கான வேறுபாட்டை மக்கள் நன்கு உணர்ந்திருந்தார்கள். ஆனால் தமிழகத்தில் தமிழக தலைவர்கள்  தேசியவாதம் பேசினார்கள்.  எண்ணிக்கை பலம் கொண்ட பிற்ப்படுத்தபட்டோர்  அனைவரும் தேசியவாதத்திலும் திராவிடவாதத்திலும் மதி மயங்கி இருந்தார்கள். "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற என்னத்தை உலகிற்கு உரைத்த இனமாக இருந்த காரணத்தால் யாரையும் எளிதில் நம்பினார்கள்.

ஆக மொத்தத்தில் பூர்வகுடிகளுக்கும் வந்தேரிகளுக்கும் இடையிலான போராட்டமாக மற்ற மாநிலங்களில் பார்க்கப்பட்டபோது இங்கே அயலவர்கள் ஊடுருவுவதற்கும் அவர்கள் நிலைபெருவதர்க்குமான இயக்கமாக இருந்து வந்துள்ளது. கர்நாட்டகத்தில் இருந்தும் கேரளத்தில் இருந்தும் தமிழகத்தில் ஊடுருவியவர்கள் எண்ணிக்கை என்பது ஆந்திரத்தில் இருந்து ஊடுருவியவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது குறைவு.

அதேபோல தமிழகத்தில் இருந்து அந்த மூன்று மாநிலங்களில் ஊடுருவியவர்களின் எணிக்கை சொற்பம். குறிப்பாக சொல்வதென்றால் திரிவடுகத்தில் இருந்து தமிழ்  நாட்டில் ஊடுருவியவர்களின் எனிக்கையோடு ; தமிழ்நாட்டில் இருந்து திரிவடுகத்தில் குடியேறிய தமிழர்களின் இனிக்கையை ஒப்பிட்டு பார்த்தால் மிகவும் குறைவாக இருக்கும். அதிலும் கூட பலர் தமிழை தாய் மொழியாக கொண்டிராதவர்கலாக இருப்பார்கள்.

ஒவ்வொரு முறை காவேரி பிரச்சனை வரும்போதும், "நிதானமாக முடிவெடுக்க வேண்டும் அங்கு இருக்கும் தமிழர்களுக்கு  எந்த சிரமமும்  வந்து விடக்கூடாது" என்று கலைஞர் பேசுவது எதற்க்காக?

தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 53




செம்மர கடத்தலில் ஈடுபடுபவர்களை தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காக நாம் ஆதரிக்கலாமா? விசாரணை திரைப்படம் பார்த்துவிட்டு ; தமிழர்களாக தங்களை முன்னிறுத்தி ஆந்திர காவல் படுகொலைக்கு ஆதரவாக கேள்வி கேட்க்கும் திரிவடுக நண்பர்களுக்கு​...

1) பாரபட்சம் பார்க்காமல் தண்டனை கொடுப்பது பற்றி தமிழர்களுக்கு பாடம் எடுக்கும் அருகதை இங்கு யாருக்கும் கிடையாது. குற்றம் செய்தவன் இரத்த சொந்தமாக இருந்தாலும் அவனுக்கான தண்டனையை பெற்றுத்தருவதில் காட்டும் முனைப்பில் பிழை கண்டுபிடிக்கவோ அல்லது பின்பற்றவோ வேறு யாராலும் முடியாது. 

2) தமிழர்களுக்கு மட்டும் தான் எங்கள் ஓட்டுன்னு தமிழர்கள் முடிவு செஞ்சிருந்தா, இத்தன வருஷமா திரி வடுகர்கள் ஆட்சி செய்திருக்க முடியாது.

3) கொடூரமான தண்டனை செஞ்சா, இப்படி சுட்டா தான் பயம் இருக்கும் யாரும் இனிமேல் இப்படி தப்பு செய்யமாட்டாங்க.  சரியாக  சொன்னீங்க ; வாங்க கருணாநிதி & ஜெயலலிதா நெத்தி பொட்டுல சுட்டு ஆரம்பிக்கலாம்.

பர்மாவுக்கு சென்ற பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அங்கு குடியேறிய இந்தியர்களிடம் இப்படி பேசினார்,  "இன்று முதல் நீங்கள் பர்மா நாட்டு மக்களோடு மக்களாய் வாழ வழி வகுத்துக்கொள்ளுங்கள். இல்லையேல் எதிர்காலத்தில்  கஷ்ட நஷ்டங்களுக்கு நீங்கள் ஆளாக வேண்டி வரும். இங்கே வாழ்ந்து கொண்டு, இந்த நாட்டிற்கு விரோதமாக அல்லது துரோகமாக எதையும் செய்யாதீர்கள்." 


திரு. முத்துராமலிங்க தேவர் அவர்கள் தமிழர்களிடம் பேசி வழிகாட்டியது போல திரிவடுக முன்னோர்கள் தங்கள் இன அரசியல் வியாதிகளிடம் பேசி இருந்தால் (பூர்வ குடிகளுக்கு எந்த வகையிலும் துரோகம் நினைக்காதீர்கள் என்று) இத்தனை சீரழிவு நடந்திருக்காது. நடந்திருக்காது.


தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 54

மாநில கட்சிகள் / தமிழர் கட்சிகள் :

சிலம்புச் செல்வர் திரு. ம.போ.சி. அவர்கள் "தமிழரசுக் கழகம்" என்கிற இயக்கத்தை நடாத்தினார். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, தமிழக எல்லைகளை தாராளமாக அடுத்தவர்களுக்கு விட்டுக்கொடுத்தது காங்கிரஸ். இன்றைக்கு தமிழகத்தோடு பல பகுதிகள் இருப்பதற்கு முக்கிய காரணம் இவரும், திரு நேசமணி அவர்களும் என்று சொன்னால் மிகையாகாது.

அண்மையில் கூட, தமிழக கோட்டாவில் மைய அமைச்சராக இருக்கும் திரு. பொன் ராதா கிருஷ்ணன் அவர்கள் தமிழகத்தோடு இருக்கும் சில பகுதிகள் கேரளாவோடு இருந்திருக்கலாம் என்ற கருத்தை வெளியிட்டிருந்தார். பதவிக்கு வரும் வரை தமிழராக இருப்பவர்கள், பதவிக்கு வந்தவுடன் கேரளத்துக்காரர்கலாக ஆகிவிடுகிறார்கள். 

ம.போ.சி. அவர்கள் கூட தன்னுடைய அகவை 50 ஆனத்துக்கு பிறகு தடம் புரண்டுவிட்டார் என்று தெரிய வருகிறது. 

ஓய்வு பெற்ற IAS அதிகாரி மலைச்சாமி அவர்கள் ஒரு அரசியல் கட்சியை துவக்கி நடத்தினார். தேர்தல் கூட்டணி குறித்து பேச்சு வரும் போது அந்த கட்சியை கலைத்துவிட்டு அதிமுகவில் சேர்ந்தால் கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிடலாம் என்று ஒரு நிபந்தனை வைக்கப்பட்டது, அ.தி.மு.க. வில் ஐக்கியமானார். மறுபுறம், இடையில், திரு ஜகத்ரட்சகன் (ஜனநாயக முன்னேற்ற கழகம்) ; இப்படி நிறைய பேர். இப்படியாக தமிழர் கட்சி எதுவா இருந்தாலும் கலைச்சிட்டு, திரிவடுக / தேசிய கட்சில இணையனும். இல்லைனா அந்த கட்சிய சாதி கட்சினு சொல்லுவாங்க.

பா.ம.க. ~ இந்த கட்சியை துவங்கியது வன்னிய சமுதாய பெரியவர்கள் மட்டும் இல்லை. மருத்துவர் ராமதாசுக்கு நண்பர்களாக இருந்த பல சமுதாயத்தை சார்ந்தவர்களும் சேர்ந்து துவக்கினார்கள்.

வகை மாதிரிக்கு சொல்லுவதென்றால், திரு. பொன்னுசாமி மற்றும்  திரு. தலித்.ஏழுமலை ஆகியோர் மைய அமைச்சராக பா.ம.க. சார்பாக இருந்துள்ளார்கள். 

பொது இடங்களில் புகை பிடிகுறது இப்ப இல்லவே இல்லன்னு சொல்ல முடியாது ஆனா, பல பேருக்கு இப்ப ஒரு விழிப்புணர்வு வந்திருக்கு; நிறைய குறைஞ்சிருக்கு. மதுவுக்கு எதிரா தொடர்ந்து போராட்டங்களை  முன்னெடுக்கிறது. 

ஆனால் இந்த கட்சியின் முதல்வர் வேட்பாளர் இன்னும் பக்குவப்படவில்லை. சில விரும்பத்தகாத பிரச்சனைகள் என்று வருகின்றபோது வட மாவட்டங்களை விட இந்த பிரச்னை தென் மாவட்டங்களில் அதிகம் என்று மாநிலத்தின் ஒரு பகுதியை மட்டும் பிரதிபலிக்கிறார். மாநிலத்துக்கே பொதுவானவராக செயல்பட முடியுமா என்று தெரியவில்லை. ஒரு வேலை மற்ற மாநிலங்கள் பிரிக்கப்பட்டது போல தமிழகமும் என்றாவது பிரிக்கபட்டால் அந்த மாநிலத்துக்கு முதல்வர் ஆகலாம், தற்பொழுது இருக்கும் மாநில அமைப்பில் தன்னால் முதல்வர் ஆக முடியாது என்கிற புரிதலாகவும் இருக்கலாம்.

அதுபோலவே இயக்குனர் நடிகர் சீமான் கட்சி கூறும் கருத்துக்கள்  பல நேரங்களில் சரியாக இருந்தாலும் கூட, சினிமாவில் இருந்து வரும் ஒருவரை மீண்டும் ஏற்கும் மன பக்குவம் இல்லை. மீண்டும் ஒரு விசிலடிச்சான் கூட்டத்தை...வேண்டாம்... விரைவில் சீமான் இல்லாத கட்சியாக அது உருபெறும் என்பது என் கணிப்பு...


கடைசியா ஒரு அடிப்படை வேறுபாடு என்னனா, தங்கள் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் தொகுதிகளை விட்டு கொடுத்துவிட்டு தோற்கும் தொகுதியில் நிற்கும் கட்சி, தமிழர் கட்சி. தனக்கு தோல்வி உறுதி என்ற தொகுதிகளை மற்றவர்களுக்கு கொடுத்துவிட்டு மற்றவர்களுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் தொகுதிகளையும் சேர்த்து நிற்கும் கட்சி தான் திரிவடுக / தேசிய கட்சிகள்.


தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 55



தேர்தல் விதிமுறைகளின் படி இன்றோடு தேர்தல் பரப்புரைகளை முடித்துக்கொள்ள வேண்டும். 1962 ஆண்டு நடந்த தேர்தல் பரப்புரையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்கள் பேசிய பேச்சு இன்றும் பொருந்துவதாக இருக்கிறது. அதில் சில பகுதிகள் மட்டும் இங்கே.

ஓட்டுப் போடுகிற வகையில் மக்கள் எதையும் எதிர்ப்பார்க்காதீர்கள். அது மகா பாவம். ஒரு கிராமத்தில் முளைக்கொட்டு என்றால் இரண்டு ரூபாய் எடுத்துக்கொண்டு போய்ப் பார்க்கிறீர்கள். ஜல்லிக்கட்டு என்றால் நாலு ரூபாய் எடுத்துப் போய் வேடிக்கை பார்த்து வருகிறீர்கள். சினிமாவுக்கு ஐந்து ரூபாய் செலவிட்டுப் போய் பார்க்கிறீர்கள். ஆனால், தேர்தலில் ஓட்டுப்போடுவதற்கு மட்டும் யாராவது பணம் தருவார்களா என்று எதிர்பார்க்கலாமா?

உங்கள் தலைவிதியை ஐந்து வருடங்களுக்கு ஒப்புவிக்கும் ஒரு கடமை அல்லவா ஓட்டுபோடுவது! காசுக்காக காத்திராமல் நமது சொந்த தேசிய திருவிழாவுக்காக என்று நினைத்து கொண்டு, அவரவர் வசதி, சக்திக்கு தக்கவாறு சொந்த பணத்திலிருந்து இரண்டோ மூன்றோ எடுத்துப்போய் செலவிட்டு ஓட்டுப்போடுங்கள். அதுதான் நல்ல மக்களுக்கு அடையாளம். 


பாச தலைவனுக்கு பாராட்டு விழா. விருது கொடுத்தா விமர்சனம் செய்ய கூடாது.

ஒருபுறம் நெற்றியில் குங்குமம் வைத்துவரும் கட்சிகாரனை ஏசுவது ; மறுபுறம் மனைவியார் / துணைவியார் திரிவடுக சாய்பாபாவின் காலில் விழுந்தாலும் சிரித்துக்கொண்டே பார்ப்பது. நெற்றியில் திரு நூறு குங்குமம் வைத்து வந்தால் உடனே ஒரு நக்கல்....


தில்லி போக்குவரத்து விதிகளை எதிர்க்கும் MP க்கள். கோவையில் விபத்தில் இறந்த காவலரும் அவரின் பெண்களும்...

தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 53

தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 53




செம்மர கடத்தலில் ஈடுபடுபவர்களை தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காக நாம் ஆதரிக்கலாமா? விசாரணை திரைப்படம் பார்த்துவிட்டு ; தமிழர்களாக தங்களை முன்னிறுத்தி ஆந்திர காவல் படுகொலைக்கு ஆதரவாக கேள்வி கேட்க்கும் திரிவடுக நண்பர்களுக்கு​...

1) பாரபட்சம் பார்க்காமல் தண்டனை கொடுப்பது பற்றி தமிழர்களுக்கு பாடம் எடுக்கும் அருகதை இங்கு யாருக்கும் கிடையாது. குற்றம் செய்தவன் இரத்த சொந்தமாக இருந்தாலும் அவனுக்கான தண்டனையை பெற்றுத்தருவதில் காட்டும் முனைப்பில் பிழை கண்டுபிடிக்கவோ அல்லது பின்பற்றவோ வேறு யாராலும் முடியாது. 

2) தமிழர்களுக்கு மட்டும் தான் எங்கள் ஓட்டுன்னு தமிழர்கள் முடிவு செஞ்சிருந்தா, இத்தன வருஷமா திரி வடுகர்கள் ஆட்சி செய்திருக்க முடியாது.

3) கொடூரமான தண்டனை செஞ்சா, இப்படி சுட்டா தான் பயம் இருக்கும் யாரும் இனிமேல் இப்படி தப்பு செய்யமாட்டாங்க.  சரியாக  சொன்னீங்க ; வாங்க கருணாநிதி & ஜெயலலிதா நெத்தி பொட்டுல சுட்டு ஆரம்பிக்கலாம்.

பர்மாவுக்கு சென்ற பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அங்கு குடியேறிய இந்தியர்களிடம் இப்படி பேசினார்,  "இன்று முதல் நீங்கள் பர்மா நாட்டு மக்களோடு மக்களாய் வாழ வழி வகுத்துக்கொள்ளுங்கள். இல்லையேல் எதிர்காலத்தில்  கஷ்ட நஷ்டங்களுக்கு நீங்கள் ஆளாக வேண்டி வரும். இங்கே வாழ்ந்து கொண்டு, இந்த நாட்டிற்கு விரோதமாக அல்லது துரோகமாக எதையும் செய்யாதீர்கள்." 

திரு. முத்துராமலிங்க தேவர் அவர்கள் தமிழர்களிடம் பேசி வழிகாட்டியது போல திரிவடுக முன்னோர்கள் தங்கள் இன அரசியல் வியாதிகளிடம் பேசி இருந்தால் (பூர்வ குடிகளுக்கு எந்த வகையிலும் துரோகம் நினைக்காதீர்கள் என்று) இத்தனை சீரழிவு நடந்திருக்காது. நடந்திருக்காது.

தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 51

9) மோசடி / ஊழல் / கொலை குற்ற சாட்டு வந்தால் அதனை கடைசிவரை கண்டுபிடிக்காமல் யூகத்துக்கு விடுதல். அல்லது அதன் மூலம் அனுதாப ஆதாயம் அடைய முயல்வது.

கள்ள நோட்டின் வரிசை எண் உட்பட அனைத்து விபரங்களையும் கூறி முதல்வருக்கு அதில் பங்கு இருக்கிறது என்று குற்றச்சாட்டு எழுந்தபோது அந்த குற்றசாட்டை விசாரணை செய்யாமல் இருந்தது காமராசரின் காங்கிரஸ் அரசு.   செய்திருப்பேன் என்று நம்புகிறீர்களா என்ற உணர்ச்சி வசனம் பதிலாக இருந்தது. ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் இல்லை.

அழகிரி மீதான குற்றசாட்டு போல முடிவுக்கு வராத அரசியல்  எவ்வளவு திரிவடுக ஆட்சியில்...

10) காமராசரின் காங்கிரஸ் அரசு காலனிகளை உருவாக்கியது. மதுரையில் மாட்டு தாவணி அருகில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இடம் ஒதுக்கபட்டது இன்று போல அன்று போக்குவரத்து வசதிகள் கிடையாது. எல்லாரோடும் சேர்ந்து வாழ்வதற்கு ஏற்றார் போல ஊருக்கு உள்ளேயே  உருவாக்கலாமே. ஏன் ஊருக்கு வெளியே இடம் பெயர்த்தவேண்டும்? என்று சட்டசபையில் குரல்கள் எழுந்தது.

கலைஞர் சமத்துவபுரத்தை ஊருக்கு வெளியே உருவாக்கினார்.  காங்கிரஸ் அரசு தாழ்த்தப்பட்டவர்களை மட்டும்  ஊருக்கு வெளியே கொண்டுபோனால், அவர்கோடு சேர்ந்து வாழ வேண்டும் என்கிற எண்ணம் இருப்பவர்கள் அனைவரும் ஊருக்கு வெளியே செல்லுங்கள் என்ற நிலையை உருவாக்கினார்.

11) இயற்க்கை வளங்களை அழித்தல் -  கர்ம வீரர் காமராசர் ஆட்சி காலத்தில் தான் சென்னையின் குப்பை, பள்ளிக்கரணை சதுப்பு நில காடுகளில் கொட்டும் வழக்கம் துவங்கியது.  அதனை திரிவடுக கட்சிகள் இம்மி பிசகாமல் கடை பிடித்தன..பெரும்பாலான நீர் நிலைகளை அழித்து விட்டார்கள். கோவையில் தமிழ் மாநாடு நடத்துகிறேன் என்று மரங்கள் அனைத்தையும்  வெட்டி வீழ்த்திவிட்டார்கள்.

தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 50

5) பதவி / ஆதாயம் அடைய வேண்டும் என்றால் உடனே தன் அடையாளத்தை மாற்றி கொள்வது : பிராமணர் ஒருவரை, தன் அரசியல் குருவாக ஏற்றுக்கொண்டு அரசியல் பாடம் பயின்று, கட்சியிலும் வளர்ந்துவிட்டு ; முதல்வர் பதவியை அடையவேண்டும் என்கிற ஒரே நோக்கத்துக்காக ; பிராமணர், பிராமணர் அல்லாதோர் என்ற பிரிவினையை பேசினார். பச்சை தமிழர் என்ற அடையாளம் பூண்டார். மாநில தேர்தலில் திரு. சீனிவாசனிடம் தோற்ற பிற்ப்பாடு நாடாளுமன்ற தேர்தலில் நிற்கும்போது தன் பெயருக்கு பின் தன் சமுதாய அடையாள பெயரை சேர்த்துக் கொண்டார். 

இந்த வழக்கத்தை திரிவடுக கட்சிகள் தொடர்ந்து நடைமுறைபடுத்தி வருகிறார்கள். அண்மைக்கால உதாரணம் வேண்டுமென்றால் மங்கூஸ் என்று பலராலும் புகழப்பட்டு வந்த மனுஷ்யபுத்திரன் இன்று அவருடைய மத அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டிய நிபந்தத்தில் ; தன் இயற் பெயரை முன்னிலைபடுத்துகிறார்.

6) தனக்கு பிடித்த நடிகர் / நடிகை என்றால் அரசியலில் சேரலாம் மற்றவர்கள் என்றால் கூத்தாடிகள் அரசியலுக்கு வரக்கூடாது என்று பேசுவது.

நடிகர்களை அரசியலில் நுழையவிட்டு நாட்டை சீரழித்ததில் திரிவடுக கட்சிகளுக்கு எவ்வளவு  பங்கு இருக்கிறதோ அதே அளவு பங்கு திரு காமராசர் காங்கிரசுக்கும் உண்டு.

7) அடுத்த கட்சியில் பணக்காரன் நின்றால் அது பணக்காரர்கள் கட்சி என்பது அதே நேரத்தில் தன் கட்சியில் பணக்காரர்களை வேட்பாளர்களாக நிறுத்துவது.

8) தினத்தந்தி நாளிதழில் இப்போது வெளியிட்டிருக்கும் மீள் பதிவை பார்த்தால், காமராசர் ஆட்சியில் அரிசி பருப்பு போன்ற, அன்றாட பயன்பாட்டுக்கு தேவையான பொருட்களுக்கு செயற்கை தட்டுப்பாடு நிலவி இருக்கிறது கேட்க்கும் விலை கொடுத்தால் எல்லாமும் கிடைக்கும் என்ற நிலை. இந்த பதுக்கல் மற்றும் கருப்பு சந்தையை கட்டுப்படுத்த இயலாத கடத்தலுக்கு உடந்தையான ஒரு அரசாகவே காமராசரின் காங்கிரஸ் அரசு இருந்துள்ளது. 

இன்று வரை அந்த நிலைமை மாறவில்லை. பசுமை காய்கனி அங்காடி என்று ஊரை ஏமாற்றுகிறார்கள்.

தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 49

2) ஒரு திட்டத்துக்கு தேவைப்படும் நிதிஆதாரத்தை ஒதுக்காமல் திட்டத்தை துவக்குவது ; துறையை ஏற்ப்படுத்துவது  ; அடிக்கல் நாட்டுவிழா மட்டும் நடாத்துவது. அதுவும் ஆட்சியில் இருந்து விலகும் நேரத்தில்.... அது குறித்து கேள்வி எழுப்பினால் உணர்ச்சி வசனங்கள் பேசுவது.

கர்ம வீரர் காமராசரின் பெயர் சொல்லும் மதிய உணவு திட்டம் பற்றி முன்னமே கல்வி பகுதியில் பார்த்தோம்.

அதுபோலவே கலைஞரும் மாற்று திரனாளிகள்  என்ற துறையை உருவாக்கினார் போதிய நிதி ஆதாரத்தை ஒதுக்காமலே. செல்வி ஜெயலலிதாவும் பல அடிக்கல் நாட்டு விழாக்கள் மட்டும் நடத்தி இருக்கிறார்.  பல மாவட்டங்கள் துவக்கபட்டபோதும் கிட்ட தட்ட இதே நிலை தான்.

3) தனிப்பட்ட (அல்லது அரசியல்) பகையை (அல்லது இயலாமையை) திசைதிருப்பி சாதி / இனக்குழுக்களின் பிரச்சனையாக சித்தரித்து கவனத்தை திசை திருப்புவது.

நேரு வந்து பரப்புரை செய்தும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் தொடர்ந்து தோற்றார்கள். அரசாங்கத்தின் மேல் மக்களுக்கு அதிர்ப்த்தி உருவானது. இந்த வஞ்சத்தை தீர்க்க கவனத்தை திசை திருப்ப முதுகளத்தூர் கலவரத்தை காமராசர் & பக்தவச்சலம் அரசாங்கம் உருவாக்கியது.

கலைஞர் பற்றி சொல்லவே வேண்டாம் எல்லாருக்கும் நல்லா தெரியும். செல்வி ஜெயலலிதா இந்த முறை அதை செய்ய முற்ப்பட்டு ஒரு இடத்தில் தோற்றார் மற்றொரு இடத்தில் வெற்றி பெற்றார். சில வருடங்களுக்கு முன் பரமக்குடியில் நடந்த காவல்துறையின் துப்பாக்கிச்  சூடை சாதி சண்டையாக சித்தரிக்க முயன்றார். ஆனால் அவரது கூட்டணியில் இருந்த டாக்டர் கிருஷ்ணசாமி  அதனை மறுத்து சட்டமன்றத்தில் இருந்து வெளியேறினார். அடுத்ததாக இளவரசன் என்ற ஒரு வாலிபனை பகடையாக வைத்து ஒரு முயற்சி ; அதில் செல்வி ஜெயலலிதாவுக்கு வெற்றி தான்.

4) வணிக குழுமம் போல அரசாங்கம் செயல்படுவது.

பொது விநியோக திட்டத்தை துவக்கிய போது அதனை பலரும் விமர்சனம் செய்தார்கள். அரசாங்கமானது வணீகத்தில் ஈடுபடக்கூடாது ; வணிகர்களை கட்டுபடுத்த  வேண்டும் என்று. இன்றளவும் தமிழக ரேஷன் அரிசி மற்ற மாநிலங்களுக்கு கடத்தபடுவது தொடர்கிறது. 

திரிவடுக ஆட்சியில் கல்வி மருத்துவம் போன்ற மக்களுக்கு அடிப்படையான விடயங்கள் தனியார் வசமும் போக்குவரத்து ; மதுபான கடைகள் மற்றும் இன்ன பிற விடயங்கள் அரசாங்கத்தாலும் விற்பனை செய்ய படுகின்றன.

தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 48

தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 48

காமராசர் ஆட்சியை கொண்டுவருவோம்னு சிலர் சூளுரைக்குறாங்க. அப்படினா என்ன? அது சாத்தியமா? சுதந்திரத்துக்கு முந்தய காலகட்டத்தில் காமராசர் ஒரு சிறந்த தேச பக்தர். அதனை யாரும் மறுக்க முடியாது. ஆனால் சகவாச தோஷம் தான் கெடுத்துவிட்டது.  ஒன்று நேரு. மற்றொன்று திருட்டு திரிவடுக கூட்டம்.

1) BHEL நிறுவனத்துக்காக நிபுணர்கள் இடம் தேடியபோது அதற்க்கு தகுந்தார் போன்ற இடம் எங்கும் கிடைக்கவில்லை ; அப்போது முதல்வராக இருந்த திரு. காமராசர் அவர்கள், திருவெறும்பூர் என்ற இடத்தை பரிந்துரை செய்தார். நிபுணர்கள் எதிர்பார்த்த அம்சங்கள் நிறைந்த இடமாக அந்த இடம் இருந்ததால் அங்கே BHEL  நிறுவனம் வந்தது.  பல பேருக்கு வேலை வாய்ப்பை கொடுத்தது.

இந்த நிகழ்வானது நம் எல்லோருக்கும் தெரியும். படிக்கவில்லை என்றாலும் கூட அவரின் புவியியல் அறிவு எல்லாராலும் மெச்சப்பட வேண்டும். 

அதே காமராசர் தான் சீமை கருவேலம் மரங்களை முகவை மாவட்டத்தில் தூவிவிட்டார். நாரை தாண்டா கண்மாய் என்று பெயர் பெற்ற, மாநிலத்திலேயே அகலம் அதிகம் உடைய கண்மாய் என்று அறியப்பட்ட ராமநாதபுர கண்மாய் இருந்தும்  அங்கே பல வருடங்களுக்கு முன் அங்கே தண்ணீருக்கு தட்டுப்பாடு வந்து. இன்றைக்கு மகாராஸ்ட்ராவில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு பற்றியும் இரயிலில் தண்ணீர் கொண்டு செல்லபடுவது குறித்தும் இப்போது ஊடகங்களில் பார்க்கிறோமே அது போன்ற நிலை ராமநாதபுர மாவட்டத்தில் ஏற்ப்பட காரணம் சீமை கருவேலம் தானே. அதற்க்கு பொறுப்பு ஏற்ப்பவர்கள் யார். அரசு அதிகாரிகள் தானே...

ஒரு திட்டத்தின் மூலம் நல்ல பெயர் கிடைகிறது என்றால் அது அரசியல்வாதிக்கும் ; கெட்ட பெயர் கிடைகிறது என்றால் அது அரசு அதிகாரிகள் / ஊழியர்களுக்கு போய் சேர வேண்டும். இந்த நடைமுறை இன்றுவரை மாறவே இல்லை. 

உழவர் சந்தை மூலம் நல்ல பெயர் வருகிறது என்றால், அந்த திட்டத்தை கொண்டுவந்தவர் கருணாநிதி என்று எல்லாரும் அறிந்து கொள்வார்கள். அதுவே மீத்தேன் திட்டத்தில் கையெழுத்து போட்டுவிட்டு, அதிகாரிகள் எங்களை தவறாக வழி நடத்தி விட்டார்கள் என்று ஸ்டாலின் சொல்லுவார்.

தொட்டில் குழந்தை திட்டத்தால் நல்ல பெயர் வருகிறது என்றால் அது செல்வி ஜெயலலிதாவையும் ; பெரும் வெள்ளத்தில் மக்கள் பாதிக்க பட்டால் அதில் வரும் கெட்ட பெயர், அது அதிகாரிகளின் கவனக்குறைவால் நடந்தது என்றும் அறியப்படும்.  

தோழர் மண்ணாங்கட்டி குறித்த நிகழ்வு அனைவருக்கும் தெரியும் என்பதால் அதை பற்றி மீண்டும் விலாவரியாக பேச வேண்டாம். தவறு நடந்து விட்டது என்றதும், என் கவனத்துக்கு வராமல் நடந்து விட்டது என்று திரு. காமராசர் கூறினார். அதுபோலவே கடந்த சில வருடங்களுக்கு முன் தேர்வுகளை தமிழில் எழுத முடியாது ஆங்கிலத்தில் மட்டுமே எழுத வேண்டும் என்று கல்லூரி மாணவர்களுக்கு சுற்றறிக்கை தயாரானது.  இறுதியில், என் கவனத்துக்கு வராமல் அதிகாரிகள் தவறு  விட்டார்கள் என்று செல்வி ஜெயலலிதா கூறினார். 

செல்வி ஜெயலலிதாவுக்கு தெரியாமல் அவரது முன் அனுமதி இல்லாமல் அதிகாரிகள் மற்றும் மந்திரிகளால் மூச்சு விட முடியும் என்று சொன்னால் யாராவது நம்புவார்களா? 

தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 47

தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 47

"organic பொருள்ன்னு சொல்லி இப்பலாம் நிறைய பேரு ஊற ஏமாத்துறாங்க. அவங்களோட நிலத்துல மரபணு மாற்றப்பட்ட விதை ; ரசாயன உரங்கள் ; பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தலைனாலும், அவங்க நிலத்துக்கு பக்கத்துல இருக்க நிலங்கள்ள இதை எல்லாம் பயன்படுத்துனா, அதோட தாக்கம் எல்லாத்துக்கும்  உண்டு இல்லையா. அப்பறம் எப்படி organic பொருள்னு சொல்லமுடியும்?"  இப்படி சிலர் பேசுறாங்க.

இவங்களோட வாதம் எப்படினா எல்லாரும் மாறனும் இல்லைனா யாருமே மாற கூடாது. ஆனா எதார்த்தம் வேருமாதிரி இருக்கு. வரத்து மற்றும் தேவை இதில் ஏதோ ஒன்றின் மூலமாக  சந்தையின் போக்கில் மாற்றத்தை கொண்டுவர முடியும்.  வரத்தில் ஏற்ப்படும் சிறு மாற்றமானது சில காலத்தில், அந்த மாற்றத்தின் மூலமாக தேவையில் மாற்றத்தை கொண்டு  வரும். அந்த மாற்றமானது வரத்திலும்  முழுமையான மாற்றத்தை நாளடைவில் கொண்டுவரும். உதாரணத்துக்கு சொல்வதென்றால் noodles என்ற ஒன்று சந்தையில் நுழைந்தபோது அதற்கென்று ஒரு தேவை இருக்கபெறவில்லை. ஆனால் இன்று நிலைமை அப்படி இல்லை.

தமிழக அரசாங்கம்  தோட்டகலைத் துறை மூலமா மாடித்தோட்டத்த ஊக்கபடுத்துறாங்க. நல்ல விடயம் தான். ஆனா அதுல கொடுக்குற விதைகள், மரபணு மாற்றபட்ட விதைகளா இருக்கிறதா சொல்லுறாங்க.  இது ஒரு அழிவு வேலையாகும். நல்ல விதைகள கொடுத்தா  தேவல.

தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 46

தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 46

கல்லூரில படிக்கும்போது திருக்குறள மேற்கோள் காட்டி  விவசாயம் எவ்வளோ சிறந்தது ; விவசாயிகள எல்லோரும் எவ்வளோ மதிக்கணும்னு பேசிகிட்டு இருந்தேன். விவசாயி கணக்கு பாத்தா ஒன்னும் மிஞ்சாதுங்குற  எல்லாரும் சொல்லுற வசனத்த சொன்னேன். நண்பன் ராஜேந்திரன் பொங்கி எழுந்துட்டாப்புல. விவசாயிகளுக்கு தான் இலவச மின்சாரத்த அரசாங்கம் கொடுக்குது.  விவசாய வருமானத்துக்கு தான் வரிவிலக்கும் இருக்குனு பேசுனாப்புல. மனசுக்கு ரொம்ப சங்கடமா இருந்தது.

பெட்டி கட காரன் எவன் வரி கட்டுறான் தொழில் செய்யுறவன் எத்தன பேரு ஒழுங்கா வரி கட்டுறான்னு ஒரு விதமா வாக்குவாதம் நடந்தது. அரசாங்கம் செய்ய வேண்டியத செய்யாம விட்டுட்டு தேவை இல்லாதத செய்யுறதால இந்த மாதிரி பழுதுபட்ட புரிதல் பல தரப்புலயும் இருக்கு.

அறுவடைக்கு பிந்தைய காலத்தில் உணவு பொருட்கள் அதிகம் விரயம் ஆகுரதாவும் ;  உணவு & தானியங்கள் பதப்படுத்துதல் துறைய சீர் செய்ய போறதாவும் தொடர்ந்து அமைச்சர்கள் பேசுறாங்க. Food Corporation of India நிறுவனத்துல நிறைய உணவு தானியங்கள் வீனாகுறதாவும் அத  பட்டினியால் இறக்கும் இந்தியர்களுக்கு கொடுக்கலாமேன்னு  நீதிமன்றம் கேட்டா,  அது முடியாதுங்குறாங்க. அங்க வேலை பாக்குற மூட்டை தூக்கும் தொழிலாளி ; நாட்டின் ஜனாதிபதியை காட்டிலும் அதிகம் சம்பளம் வாங்குறதா செய்தி வந்தது. அத வச்சு வழக்கு நடந்தது.

Walmart வர போகுது அதனால வியாபாரிகள் எல்லாத்துக்கும் சிரமம்னு ஒரு போராட்டம் நடத்துனாங்க. நல்லது  கெட்டது பாக்காம உரத்தையும் விதையையும்  வித்து விவசாயம் கெடுறதுக்கு துணை நின்ன  வியாபாரிகளுக்கு தார்மீக  உரிமை இருக்கா.

சென்னை K.K. நகர்ல MPM Departmental store நு ஒரு  பலசரக்கு அங்காடி இருக்கு தந்தை  மற்றும் மகன்கள் சேர்ந்து கடைய நடத்துறாங்க. அங்க வேலை செய்யும் பணியாட்கள் எல்லோருமே அந்த கடை முதலாளிய  அப்பான்னு தான் கூப்பிடுவாங்க. வாடிக்கையாளர்கள் கிட்ட அவங்க  காட்டுற மரியாதையும்  கொடுக்குற சேவையும் சிறந்ததா இருக்கும். பொருளும் விலையும் அப்படிதான். எத்தன Walmart  வந்தாலும் இவங்கள அடிச்சுக்க முடியாது.

தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 45

தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 45

நம்பியார் காலம் : "நான் சொல்லுற மாதிரி நீங்க கேட்கலைனா நான் வெளி ஊருல ஆளுகள வச்சு அறுவடைய முடிசுப்பேன்"...  "என்ன எசமான் எங்க வயுத்துல அடிக்குற மாதிரி நீங்க பேசகூடாது"...

ராமராஜன் / பிரபு காலம் : வெளி ஊரு ஆளுங்களையும் machine ஐயும் வச்சு அறுவடைய முடிசிடுவீங்களா. நாங்க என்ன அதுவரைக்கும் பூபரிச்சுகிட்டு இருப்போமா... 

விவசாயத்த / கிராமத்த மையமா வச்சு வெளிவந்த பழைய படங்கள்ல இந்த மாதிரி காட்சிகள் வசனங்கள் அதிகமா இருக்கும். ஆனா இப்பலாம் அப்படி இல்லை. நாங்க வேலைக்கு வரமுடியாது நீங்க யார வேனும்னாலும் கூபிட்டுகோங்க. 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் : பொது உடமை கட்சி இந்த திட்டத்த முன் வச்சப்ப விவசாய வேலை இல்லாத நாட்கள்ல  மட்டும் இத செயல் படுத்தனும் ; வேலை சரியா நடக்குதான்னு பாக்கணும் னு  சொன்னாங்க. ஆனா அந்த திட்டத்த வழக்கம் போல காங்கிரசும் மத்த கட்சியும் வாக்குவங்கி அரசியலுக்கு பயன்படுத்திட்டாங்க.  

நம்ம நாட்டுல பெரும்பான்மையோர் விவசாயத்துல ஈடுபடுறாங்க. ஆட்களின் எண்ணிக்கைக்கு தகுந்த உற்பத்தி இல்லை. உற்பத்தி திறன் இல்லாம மனித வளம் வீணா போகுது. தொழில் நுட்பத்த சரியா பயன்படுத்தி உற்பத்திய பெருக்கணும். விவசாயத்துல ஈடுபடும் தொழிலாளர்கள் நிறைய பேர் உற்பத்தி துறைல ஈடுபடனும்உலக வங்கி வழிகாட்டுதல் படி செயல்பட கூடிய மன்மோகன் சிங் / சிதம்பரம் / அலுவாலியா ஆகியோர் ஒரு விடையத்த முன்வச்சாங்க.

இதனால என்ன நடக்கும் இன்னும் நிறைய பேரு சென்னை போன்ற பெருநகரங்களுக்கு குடிபெயரனும். பெருநகரங்கள் இன்னும் நாரனும். ஏன்னா, மாவட்டம் தோறும் சீரான தொழிற்சாலைகள் வர விடமாட்டாங்க. கேட்டா, வானூர்தி மற்றும்  சரக்கு போக்குவரத்து சரியா இல்லைன்னு சொல்லுவாங்க.

தற்போதைய மோடி அரசாங்கம் விவசாயத்துக்கு முக்கியத்துவம் தரணும்னு பேசுறாங்க ; அவங்க பேசுறது corporate விவசாயம்னு விமர்சனங்களும் எழுது.