மொழி அரசியல்

(வெல்க தமிழ்!    இந்தி ஒழிக)

புரட்சி கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களுடைய மறைவு நாளில் இந்த பதிவை போடுவதில் பெருமை கொள்கிறேன். (நிதானமாக படிக்க ஆகும் நேரம் 08 நிமிடங்கள். )

If someone call themselves as Tamils and use the imaginary terminology, "Anti Hindi", just punch on their nose. Tamils are not adverse to any Hindi Aunty. We always maintain friendly relationship with all aunties (except actress) irrespective of their language. We start with friendship and move on to call as Bhabi / Didi.

Tamils are against any kind of "imposition" and not against any specific language. Whenever there is a wide spread discussion ; awareness ; planning to implement Tamil language at all levels in Tamil Nadu, Dravidian parties try to depict those efforts as actions against Hindi or any other language. They depict Tamils in bad light for their vested interests.


இந்தி எதிர்ப்பு என்ற கற்பனை சொல்லாடலை யாராவது பயன்படுத்தினால் அவர்கள் மூக்கில் இரத்தம் வருமாறு ஒரு குத்துவிடுங்கள்.

இங்கே நடந்தது & நடப்பது, திணிப்புக்கு எதிரான போராட்டம். அது என்றுமே நடக்கும். திரிவடுகர்கள், இதனை, ஒரு மொழிக்கு எதிரான போராட்டமாகச் சித்தரித்து வயிரு வளர்க்கிறார்கள். 

"வெல்க தமிழ்" என்பது சொந்த மொழி கொடுக்கும் 
ஆக்கபூர்வமான முழக்கம்.
"இந்தி ஒழிக" என்பது இரவல் மொழி கொடுக்கும் 
அழிவுப்பூர்வமான கோஷம்.

"திராவிட ஆட்சியின் மூலம் தமிழுக்கு நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்" என்று கேட்டால், "அரசு அலுவலர்கள் தமிழிலே கையொப்பமிடுகிறார்கள். அரசு அலுவலகங்களில் வாழ்க தமிழ் என்று நியான் விளக்கு மின்னச் செய்திருககிறோம்" என்று சொல்லுவார்கள். வேறு ஏதாவது என்று கேட்டால், "தமிழிலே பொறியியல் படிக்க ஏற்பாடு செய்திருக்கிறோம்" என்று சொல்லுவார்கள். சரி அதனைச் செய்ய அரை நூற்றாண்டு தேவைப்பட்டாதா? தமிழில் படித்தவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை என்று ஏன் அறிவிக்கவில்லை ; வேறு ஏதாவது ஆக்கப்பூர்வமான காரியங்கள் உண்டா என்று கேட்டால் திரு திரு என்று முழிப்பார்கள்.






இங்கே, தமிழர்களின் வளர்ச்சியில் தடை ஏற்படுத்த ; தமிழர்களின் மனதை மடைமாற்றம் செய்ய நம் பகைவர்கள் இரண்டு வழிமுறைகளை  கையாளுகிறார்கள். 

முதலாவது :

சில வாரங்களுக்கு முன்பு நடிகை Kasthuri பேசிய காணொளி ஒன்றை நாம் தமிழர் கட்சியை சார்ந்த / அனுதாபிகளான எளிய பிள்ளைகள் (Rathish போன்று) பலரும் பகிர்ந்திருந்தார்கள்.

அந்த காணொளியில், அவரின் தொழில் குறித்து பல விடயங்களை பேசியிருந்தார். திரு. Netaji அவர்கள் குறித்தும், திரு. பிரபாகரன் குறித்தும் உயர்வாக பேசியிருந்தார். இந்த காரணத்தால், அவருடைய காணொளியை பலரும் பகிர்ந்திருந்தார்கள். அடுத்த வாரத்தில், நாட்டை ஆளும் தகுதி நடிகர்களுக்கு உண்டு என்று பேசினார்.


கலைஞர் கருணாநிதியும் அப்படித்தான் தமிழின் பெருமையை தமிழனின் அருமையை பேசுவார். இதன் மூலமாக ஒரு நேர்மையான பிம்பத்யை கட்டமைத்தார். ஆனால் ஆக்கப்பூர்வமாக எதையும் செய்யமாட்டார்.

தமிழ் Hindu நாளிதழை துவக்கியது எதற்க்காக? தமிழ் மீதான பற்றா? கண்டிப்பாக இல்லை. ஆங்கில செய்தித்தாள் சந்தையில் ஒரு பின்னடைவு. தமிழுக்கு ஒரு சந்தை உருவாகி விட்டது அதனை பயன்படுத்த வேண்டும். தமிழர் என்று அடையாளப்படுத்தி தமிழர் கூட்டத்தை சேர்த்து அதன் மூலமாக நுழைந்து தமிழிலேயே தமிழ் விரோத கருத்துக்களை விதைத்து மடைமாற்றம் செய்ய வேண்டும்.

தருண் Vijay ஏன் தமிழ் குறித்தும் திருக்குறள் குறித்து பேசினார்? திருவள்ளுவர் சிலையை வடநாட்டில் நிறுவ முனைந்தது எதற்க்காக. அவர் குறித்த நேர்மறையான எண்ணத்தை ஏற்படுத்தி தன்னை நிறுவி ; பின்னர் தனக்கு பின் சேர்ந்திருக்கும் தமிழரை வைத்தே தமிழரின் அழிவுக்கு வழி செய்வார்.

இரண்டாவது :

மற்றுமொரு வழி முறையும் பின்னப்பற்றப்படுகிறது. அது தான் Manushyaputhran வழி. பல சம்பவங்கள் மூலமாக தொடர்ச்சியாக மக்கள் மனதில் எதிர்மறையாக இடம் பிடிப்பார். திடீரென்று ஒருநாள் தமிழர் நலன் குறித்து சரியான கருத்து ஒன்றை முன்வைப்பார். அவரை காரணம் காட்டி ; அவர் மீது இருக்கும் எதிர்ப்பு மன நிலையை பயன்படுத்தி அவர் சொன்ன கருத்து தவறு என்று அவருடைய ஆட்களே தங்களை தமிழராக அடையாளப்படுத்தி இரு அணிகளாக பிரிந்து நின்று விவாதம் செய்வார்கள். தமிழர்கள் வாய் பிளந்து கேட்க வேண்டும்.

"தமிழர் ஆட்சி அமைய வேண்டும். எல்லா நிலையிலும் தமிழ் நிலைக்கவேண்டும்" என்று நாம் சொன்னால், உடனே முன்னிலையாவார் ஒருவர். "மொழி அரசியல் மூலமாக ஆட்சியை பிடித்த கருணாநிதி & திராவிடர்கள் கும்பல் தமிழ் வளர்ச்சிக்கு என்ன செய்தார்கள்? இப்படி பேசி பேசி வீணாக வேண்டாம் இந்தி படித்தாலாவது மத்திய அரசு வேலைக்கு போகலாம்". அந்த ஒருவர், திராவிடர்களின் கள்ளக்காதலரான ஆரியர் என்பதனைச் சொல்ல வேண்டியதில்லை.

இங்கே யாரும் இந்தி படிப்பதை தடுத்து நிறுத்தவில்லை. யாருக்கெல்லாம் படிக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ அவர்கள் எல்லாரும் படிக்கலாம். முரசொலி  
மாறனின் பிள்ளைகள் இந்தி படித்தது அவ்வண்ணமே. 

தமிழை மையமாக வைத்து நடக்கும் எந்த ஒரு விவாதத்தையும் இந்தி மொழியை மையமாக கொண்ட விவாதமாக மாற்ற வேண்டிய கட்டாயம் Stalin வகையறாக்களுக்கு இருக்கிறது. அதற்கான காரணம் என்ன?


சில விடயங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

1) BJP போன்ற கட்சிகளின் Hindi heart land ஆட்சி போதைக்கு இந்தி மொழி பேசுபவர்கள் & தமிழர்கள், நொறுக்குத்தீனி & ஊறுகாயாக பயன்படுத்தப்படுகிறார்கள். வணீக நிறுவனங்களில் அதிகம் பேசப்படும் Pareto கோட்பாட்டின்படி இந்தி மொழி பேசுபவர்களிடம் மொழி அரசியல் செய்வதை விட தமிழர்களிடம் செய்தால் நமக்காக அவர்கள் உழைப்பர்கள். தமிழர்களின் வாக்குகளை துறந்தால் இந்தி மொழி பேசுபவர்களின் வாக்குகளை எளிதாக பெற்றுவிடலாம் என்று கணக்கு போட்டு வட இந்திய கட்சிகள் காய் நகர்த்துகிறார், அதற்க்கு கருணாநிதி ; வை.கோ. போன்றவர்கள் சேவகம் செய்கிறார்கள்.

2) தமிழ் என்பது கருணாநிதி ; வை.கோ. ; EVKS இளங்கோவன் போன்றோர்களுக்கு இரவல் மொழி. எப்படி தங்கள் தாய் மொழியான தெலுங்கை துறந்து இரவல் மொழியான தமிழையும் ஆங்கிலத்தையும் ஏற்றுக்கொண்டார்களோ அது போலவே மற்ற இரவல் மொழிகளான இந்தி அல்லது வேறு மொழியை ஏற்றுக்கொள்வதில் எந்த சிக்கலோ தயக்கமோ இருக்காது. யாரும் கோபமடைய தேவை இல்லை. வேறு மாநிலங்களுக்கு புலம் பெயர்ந்த தமிழர்களுக்கும் இது பொருந்தும்.

3) இங்கே நடந்த மொழிப்போரில் இறந்தவர்கள் அனைவரும் தமிழர்கள். ஆனால் அதைவைத்து ஆதாயம் அடைந்தவர்கள் (கருணாநிதி ; வை.கோ. ; மாறன்) யாரும் தமிழர்கள் கிடையாது. தந்தை கருணாநிதியும் மாமா மாறனும் செய்ததை
இப்போது  Stalin. செய்யப்பார்க்கிறார். அதன் முன்னோட்டம் தான் தமிழன்டா கோஷங்கள் எல்லாம்.


சேட் & மார்வாடிகள் எப்போதுமே போரில் ஈடுபடமாட்டார்கள். போருக்கான பொருளாதார உதவி மட்டும் செய்வார்கள்.

Stalin சார்பாக மொழிப்போருக்கு அழைப்பு வரும். வராதவர்களை தமிழர்கள் கிடையாதென்றும் மானம் கெட்டவர்கள் என்றும் ஏசுவார்கள்.

இந்த முறை, எளிய தமிழ் பிள்ளைகள் உயிரின் விலை அறிந்து ; ஏமாறாமல் விலகி நிற்க வேண்டும்.

No comments:

Post a Comment