#தமிழுக்கான_சந்தை (7)

"இங்கு, தமிழிலும் அர்சனை செய்யப்படும்." ஆப்ரிக்கா கன்னடத்தில் இருக்கும் வழிபாட்டுத்தளத்தில் இந்த வாசகம் இருந்தால் ஒரு குழப்பமும் இல்லை.

ஆனால் தமிழ் நாட்டில் இருப்பது சாபக்கேடு.

German மொழியிலும் அர்சனை செய்யப்படும் என்று நம் ஊர் வழிபாட்டு தளங்களில் இருக்கலாம்.

சிறுவனாக இருக்கும் போது, எங்கள் இல்லத்தை இடித்து மாற்றி கட்டியபின் மீண்டும் புகும் போது குழந்தைகள் எங்களை கந்த sashti கவசத்தை வாசிக்கச் செய்தார்கள் எம் பெற்றோர்.

நம் இல்லங்களில் நடக்கும் புதுமணை புகு விழா ; திருமணங்கள் ; இறப்பை ஒட்டி நடக்கும் சடங்குகள் அனைத்திலும் திருப்புகழ் ; திருவாசகம் ; தேவாரம் போன்ற ஆன்மீக பாடல்கள் இடம்பெற வேண்டும்.

நேர்த்தியாக செய்திடக்கூடியவர்கள் பலரும் இருக்கிறார்கள்.

இறை நம்பிக்கை இல்லாதவர்கள் திருக்குறளை மட்டும் பிடித்து தொங்காமல் மற்ற நூல்களில் உள்ள கருத்துக்களையும் ஒலிக்க செய்யவேண்டும்.

No comments:

Post a Comment