தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 41

வங்கி ஊழியர்கள் என்றாலே நமக்கு இல்லக்காரம் தான். ஒவ்வொரு நாள் இறுதியிலும் கணக்கு Tally ஆகவில்லை என்றால் அவ்வளவு தான்..  வட்டி விகிதம் குறைக்க படுகிறது என்று அறிவிப்பு வந்தால் அவர்களிடம் சென்று தான் மல்லுக்கட்டுவோம். ஆனால் அவர்களுக்கு முடிவு செய்யும் அதிகாரம் இருக்காது..  சில காலத்துக்கு முன் கூட LPG மானியத்துக்காக மற்றும் இன்ன பிற காரணங்களுக்காக, அனைவருக்கும் வங்கி கணக்கு துவக்க வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டபோது திடீர் என்று வேலைப்பளு அதிகமானது...

வங்கிகளில் வேலைக்கு சேருவதற்கு விண்ணப்பிக்கும் பெண்களுக்கு மருத்துவ சோதனை செய்யும்போது, கர்ப்ப பரிசோதனை செய்யகூடாது என்பது விதி. ஆனால் இத்தனை ஆண்டுகள் ஆன பின்னும் பல வங்கிகள் இதனை நடைமுறை படுத்தவில்லை.

தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கு இருப்பதை விட அரசாங்க பணியில் இருப்பவர்களுக்கு தான் அரசியல் குறுக்கீடுகள் அதிகம்...

நல்ல திட்டங்கள் செயல்படுத்தபட்டால் அதனால் வரும் வாழ்த்துகள் முதல்வர் /அரசியல்வாதியை அடையும். அவப்பெயர் அனைத்தும் அரசு ஊழியரை சாரும்.  முதல்வருக்கு தெரியாம அரசு அதிகாரிகள் செஞ்சது....

போலிஸ் என்று அறியப்படும் காவல்துறை நண்பர்கள் படும் பாடு சொல்லி மாளாது : ஊர்வலங்களுக்கு பந்தோபஸ்த் கொடுக்க செல்ல வேண்டும். உங்களோடு பணிபுரியும் பெண் காவலரை ஊர்வலத்துக்கு வரும் கயவர்கள் கிண்டல் செய்வார்கள். அந்த பெண் காவலரிடம் கயவர்கள் முறைதவறி நடப்பார்கள். அந்த கயவர்களை அந்த இடத்திலேயே நெத்தி பொட்டில் சுட்டு கொல்ல வேண்டும் என்று உங்களுக்கு தோன்றும். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. ஏதாவது நடவடிக்கை எடுத்தால் ஒருதலைபட்சமாக நடவடிக்கை எடுப்பதாக புகார் எழும். மனித உரிமை ஆணையம் வரும். ஆனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் காவலருக்காக எந்த ஆணையமும் வராது.

எல்லாத்தையும் பொறுத்துக்கலாம். ஆனா, "அரசாங்கம்  நமக்காக எவ்வளோ சலுகை பண்ணுது. நாம ஒழுங்கா வேலை செய்யணும்." அரசு ஊழியரா சினிமா படத்துல நடிக்குற நடிகர் டெல்லி கணேஷ் வந்து வசனம் பேசுவாரு பாருங்க...

மணல் கொள்ளையில் ஈடுபடும் சமூக விரோதிகளை பிடிக்கும் அதிகாரிகளுக்கு நாம் துணையாக நின்றிருக்கிரோமா?


பல்வேறு சிக்கல்களுக்கு இடையில் பொறுப்புணர்ந்து ஒழுக்கமாக வேலை செய்யும் ; மக்களால் கை விடப்பட்ட அரசு ஊழியர்கள் அனைவருக்கும் நல் வாழ்த்துகள்.

No comments:

Post a Comment