தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 17

தமிழக தேர்தல் 2016 ~ பகுதி 17

என் அலுவலகத்துல, கூட வேலை பாக்குற ஒருத்தரு காஞ்சிபுரத்த சேர்ந்தவரு.
பாட்டுக்கு பேர்போன ஊராச்சே எங்க வாங்குனா நல்ல பட்டு கிடைக்கும்னு கேட்டேன். அவரு சொன்னாரு செங்குந்தர் முதல்யார் னா வம்சாவழியா நெசவு செய்றவங்க. ஆனா 
இப்பலாம் எல்லாரும் ஈடுபடுறாங்க. இப்பலாம் தொழில் தர்மம் எதுவும் கடை பிடிக்குறது கிடையாது. அதனால எது நல்ல பட்டு எது மோசடி பட்டுன்னு எங்களாலேயே கண்டுபிடிக்க முடியலன்னு சொன்னார்.

வம்சாவழியா ஏற்மாடு சம்சாரியா இருந்தவங்க வீட்டுல இன்றைய தலைமுறைக்கு 10 மரபு விதைகள் பேர சொல்ல தெரியாது. தமிழ் மாதங்கள் 12 வரிசையா சொல்ல தெரியாது. (என்ன பத்தி மட்டும் சொல்லல).  

ராஜாஜி கொண்டுவந்த திட்டம் அவ்வளோ தான். நம்ம அரசியலுக்கு இத பயன்படுத்திகனும்னு தான் நினைப்பு இருந்திருக்கு. இன்னைக்கு வரைக்கும் இது தான் தொடருது. யார் கொண்டு வந்தா என்ன, திட்டத்துல உள்ள சாதக பாதகத்த பார்த்து அதுல என்ன மாற்றம் கொண்டு வர்றதுன்னு பாக்காம நிராகரிக்குறது.

குலகல்வி திட்டம்னு சொல்லி எதிர்த்தவங்க தான் பின்னாடி, "கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் ; கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்" ன்னு வசனம் பேசி வாழ்க்கை கல்வின்னு ஒரு பாடத்த கொண்டுவந்தாங்க. தேவாங்கர் மேல்நிலை பள்ளி ல கைத்தறி நெசவு இயந்திரத்த எப்படி இயக்குறதுன்னு கத்துக்கொடுத்தாங்க. கிருத்துவ பள்ளிகள்ல "moral science" ன்னு சொல்லி மத போதனை வகுப்புகள் எடுத்தாங்க. 

வெளிநாட்டுல MBA படிப்பு படிகுதுனா குறைஞ்சது 5 வருஷ வேலை முன் அனுபவம் இருக்கணும். நம்ம ஊருல அதெல்லாம் தேவை இல்லை. அவன் சின்ன வயசுல இருந்தே ஏதாவது வேலைக்கு போறான் (pocket money க்காக). நாம இங்க கல்யாணம் ஆகுற வரைக்கும் அப்பன் ஆத்தா காசுல நோகாம இருக்கோம். அவனுக்கு 5 வருட முன் அனுபவம் வேணும்னா இங்க நமக்கு எத்தன வருட முன் அனுபவம் வேணும்.

இங்க படிச்சுட்டு வெளில வர்றவங்கள வேலைக்கு வச்சுக்க முடியலைன்னு குறைபடுறாங்க. அங்க வேலை / தொழில் உருவாக்குதுக்கு படிக்குறான்.

Sandwitch course ல பாத்தீங்கனா கிட்ட தட்ட குலக் கல்வி மாதிரி தான். என்ன அப்பா அம்மாவோட தொழில செய்யாம வேற தொழில்ல ஈடுபடுறாங்க அனுபவ அறிவுக்காக.

No comments:

Post a Comment