திராவிட கம்பெனியின் கோழைத்தனம்

இந்த புகைப்படத்தை பார்த்ததும் உங்களுக்கு என்ன தோன்றுகிறது?




இந்த படத்துக்கு பின்னால் இருக்கும் அரசியல் என்று சொல்லப்படும் திராவிட கம்பெனியின் கேப்பமாரித்தனம் புரிகிறதா?

சில நாட்களுக்கு முன்னாள் நடந்த ஒரு தொலைகாட்சி விவாத நிகழ்ச்சியில் ஒரு திராவிட கம்பெனியின் முதலாளி சொன்னார், "தமிழ் மொழியில் அறிவியலே கிடையாது"

தன் முதலாளி தவறு செய்துவிட்டார் என்பது புரிந்தாலும் கூட,  தன் தாய் மொழியை இழிவுபடுத்திவிட்டார் என்பது புரிந்தாலும் கூட, அந்த திராவிட கம்பெனியின் அல்லக்கைகளுக்கு தன் முதலாளியின் தவறை எப்படி நியாயப்படுத்துவது இந்த சறுக்கலை எப்படி சரிசெய்வது; தங்கள் முதலாளியை எப்படி காப்பாற்றுவது என்று குழப்பமாக இருந்தது.

உடனே, "தமிழர்கள் washing machine ; fridge கண்டுபிடித்தார்களா? தமிழில் அறிவியல் கிடையாது", என்று தங்களுடைய முதலாளிக்கு சப்பை கட்டு கட்டினார்கள்.

அறிவியல் என்றால் என்ன; தமிழர்கள் அறிவியலில் எப்படி சிறந்தவர்கள் என்பதனை உதாரணங்கள் மூலமாக எடுத்துரைத்தார்கள் தமிழ் ஆர்வலர்கள்.

பதில் கூற முடியாத திராவிட கம்பெனி இந்த படத்தை தயாரித்திருக்கிறார்கள்.

இந்த படத்தின் மூலம் சொல்லவருவது என்ன? ஆமாம் தமிழ் மொழியில் அறிவியல் இல்லை. ஆங்கிலத்தில் தான் அறிவியல் இருக்கிறது. அதனால் என்ன வந்தது? எனக்கு தமிழ் தான் உயிர். என்று ஒரு தமிழன் கூறுவதாக தயாரித்திருக்கிறார்கள்.
அறிவியல் பூர்வமாக தர்க்கம் செய்ய இயலாத திராவிட கம்பெனி, தன்னை ஒரு தமிழனாக அடையாளப்படுத்திக்கொண்டு, தமிழனை அறிவியல் பூர்வமாக தர்க்கம் செய்ய தயாராக இல்லாதவன் போலவும் உணர்வுப்பூர்வமாக வெத்து முழக்கம் போடுபவனாகவும் அடையாளப்படுத்துகிறது.


அறிவியல் பூர்வமாக தர்க்கம் செய்யும் தமிழனை வெல்லமுடியாது என்று உணர்ந்த திராவிட கம்பெனியின் அல்லக்கைகள் கோழைத்தனமாக இப்படி செய்திருக்கிறார்கள்.




உலகம் முழுவதும் தங்கள் ஆட்சி அதிகாரத்தை நிறுவ நினைத்த ஆங்கிலேயர்கள், அவர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள் அல்லது கட்டுப்படுத்த முடியாது என்று நினைத்தார்களோ அந்த இனக்குழுக்களை
"CT ACT" (குற்றபரம்பரை சட்டம்) மூலம் கொடுமை படுத்தினார்கள். இதன் ஒரு பகுதியாக, அந்த சட்டத்தை தொடர்ந்து வைத்திருப்பதற்க்காக, ஜல்லிக்கட்டை ஏற்பாடு செய்திருந்தார்கள்.  இந்த துரோகத்தின் மூளை மூதறிஞர் ராஜாஜியுடையது.

இப்பொழுது அந்த துரோக செயலை திராவிட கம்பெனியின் அல்லக்கைகள் மெருகேற்றி செய்திருக்கிறார்கள். தன்னை தமிழன் என்று போலியாக அடையாளப்படுத்திக்கொண்டு திராவிட கம்பெனி செய்யும் இந்த கோழைத்தனமான செயல்களை நாம் முறியடிக்க வேண்டும்.

No comments:

Post a Comment