தோழர் ஜீவா



ஒத்துழமையாமை இயக்கத்தில் தீவரமாக ஈடுபட்ட காலம் : தன்னுடைய தாயார் இறந்துவிடுகிறார். இறுதி சடங்குகள் நடக்கும்போது, புது உடை அணியவேண்டும். இவரோ காதி மட்டும் உடுத்தும் கொள்கை உடையவர். அவசரத்துக்கு காதி உடை கிடைக்கவில்லை. எவ்வளவோ வற்ப்புருத்தியும் காதி உடை இருந்தால் மட்டுமே இறுதிகாரியம் செய்யமுடியும் என்று கூறியவர். இவருடைய தம்பி இறுதி சடங்குகளை செய்தார்.

ஈ.வெ.ராமசாமியி நாயக்கரின் இயக்கத்தில் இருந்தகாலம் : "நான் ஏன்நாத்திகன் ஆனேன்" என்று பகத்சிங் எழுதிய புத்தகத்தை தமிழில் வெளியிடுகிறார். நாயக்கரையும் இவரையும் காவலில் வைக்கிறார்கள். மன்னிப்பு கடிதம் கொடுத்தால் விட்டுவிடுவார்கள். நாயக்கர் மன்னிப்பு கடிதம் கொடுத்து "விடுதலை" ஆகிறார். சுயமரியாதையை அடமானம் வைத்து மன்னிப்பு கடிதம் கொடுத்து விடுதலை ஆவதில் விருப்பமில்லை இவருக்கு, சிறையில் வாடுகிறார்.

சிறுவனாக இருந்தபோது தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்த தன் நண்பனை உயர்வகுப்பை சார்ந்தவருக்கான தெருவில் / கோவில்களுக்கு அழைத்து செல்கிறார். பெரியவர்களின் கோபத்துக்கு ஆளாகிறார். இந்த தீண்டாமை கொடுமையை எதிர்த்து வாழ்நாள் முழுவதும் போராடுகிறார்.

காங்கிரசில் இருந்தகாலம் : காந்தி ஒரு மகான் என அவரை காண நாடே காத்துக்கிடக்கிறது. காந்தியே இவர் இடம் தேடி வந்து சந்திக்கிறார். இவரோ காந்தியையும் அவர் கொள்கையையும் வழிபடுபவர். தீண்டத்தகாதவர்கள் குறித்து சில கருத்துக்களை முன் வைக்கிறார். காந்திக்கு அதில் முரண்பட்ட கருத்து இருக்கிறது. ஊர் ஊராக பிரச்சாரம் செய்பவர்கள் தாங்கள் சொல்லும் போதனைகளுக்கு நேரெதிராக நடந்துகொள்கிறார்கள் என்று மண் வெதும்புகிறார்.


தோழர் ஜீவா என்று அனைவராலும் அறியப்பட்ட கொள்கை மறவன் ஜீவானந்தம் அவர்களின் நினைவு நாள் நாளை. இந்நாளில் மட்டுமல்லாது எல்லா நாளும் அவருடைய கொள்கைகளையும் கொள்கையில் கொண்ட உறுதியையும் கடைப்பிடித்து அன்னாரின் வழியில் நடந்திடுவோம். (பகுதி நான்கும் ஐந்தும் நாளை)

தமிழகத்திலே தொழிலாளர்களின் நலனுக்கு போராடுவதற்காக முதல் முதலில் அமைக்கபெற்ற தொழில்சங்கத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தலைவராக இருந்தார். அவருடன் இணைந்து அந்த தொழிற்சங்கத்தில் சிறப்பான பணியாற்றியவர் தோழர் ஜீவானந்தமும் தோழர் ராமமூர்த்தியும் ஆவார்கள்.

தோழர் ஜீவானந்தம் அவர்கள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தபோது குடும்பத்தாரோடும் அவர் சார்ந்த கட்சியினரோடும் தொடர்பில் இருந்ததில்லை ஆனால் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களோடு மட்டும் தொடர்ந்து தொடர்பில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


"ஆத்தீகனை ஆதரிப்பீர்களா இல்லை நாத்தீகனை ஆதரிப்பீர்களா என்று கேட்டால், என் கொள்கைப்படி நாத்தீகனை தான் ஆதரிப்பேன். அதுவே ஒரு ஆத்தீகன் ஒழுக்கமானவனாகவும் ஒரு நாத்தீகன் ஒழுங்கீனமானவனாகவும் இருந்தால் ஆத்தீகனைத்தான் ஆதரிப்பேன். ஒழுங்கற்றவன் நாத்தீகம் பேச யோக்கியதை கிடையாது." - தோழர் ஜீவானந்தம்.

சமதர்மம் பேணியவர் ஆனால் கொள்கையில் சமரசம் செய்தவர் அல்லர். தோழர் ஜீவா என்று அனைவராலும் அறியப்பட்ட கொள்கை மறவன் ஜீவானந்தம் அவர்களின் நினைவு நாள் இன்று. இந்நாளில் மட்டுமல்லாது எல்லா நாளும் அவருடைய கொள்கைகளையும் கொள்கையில் கொண்ட உறுதியையும் கடைப்பிடித்து அன்னாரின் வழியில் நடந்திடுவோம்.


17 ஜனவரி

18 ஜனவரி

No comments:

Post a Comment