தள்ளாட்டம்

இங்குட்டு நான். வருடத்துல எல்லா நாளையும் கொண்டாடனும்னு நினைக்குறேன். இல்லாட்டி பொங்கல் ; பிறந்தநாள் ; திருமண நாள் கொண்டாடுனா போதும்னு. தமிழல்லாத வார்த்தைகளை மாத பெயர்களாகவும் வருட பெயர்களாகவும் இருக்குற ஒரு ஆண்டு முறைய கொண்டாடவேண்டாம்னு நினைக்குறேன். தேசபக்தீங்குற போர்வைல கிரிக்கட் மூலமா கொள்ளை அடிகுரானுங்க அத புரக்கனிகனும்ன்னு கோவத்தோட நான். சினிமாவ சினிமாவா மட்டும் பாத்தா போதும் அவன தலைவனா கொண்டாடவேண்டாம்னு நினைக்குறேன்.

அங்குட்டு நண்பர்கள் ; உறவினர்கள் ; சொல்லிக்குடுத்த பெரியவங்க. 

புரட்டு இதிகாசமான மகாபாரதத்துல வரக்கூடிய கற்பனை கதாப்பாத்திரமான அர்ஜுனனுக்கு வந்த அதே நிலைமை எனக்கு. பாக்கலாம் யாரு சொல்லுற உண்மைக்கதை எனக்கு தெளிவ கொடுக்குதுன்னு.


13 ஏப்ரல்


எண்ணைக்காக நிலத்துக்கு அடியிலையும் கடலுக்கு அடியிலையும் அதிகமா தோண்டுறதால தான் இயற்க்கை சீற்றங்கள் வருது. நேத்து நில நடுக்கம் வந்ததும் ஒரே குற்ற உணர்ச்சியா போச்சு. வேற கம்பெனி மாறிடலாமான்னு யோசிச்சேன். ஒரே குழப்பமா இருந்துச்சு.

அப்ப தான் தற்ச்செயலா சில STATUS பார்த்தேன். ஒரு தெளிவு வந்துச்சு. நாம ஒரு ஆளு கம்பெனி மாறுனா இந்த பிரச்சனையை முடிஞ்சுடுமா? அதனால தொடர்ந்து இந்த கம்பன்ய்லையே இருக்கலாம்னு முடிவுபண்ணீட்டேன். 

எனக்கு ஒரு தெளிவை கொடுத்த அந்த STATUS : "தமிழகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகியிருந்தா மட்டும் போர் முடிவுக்கு வந்துருக்குமா?"


12 ஏப்ரல்

No comments:

Post a Comment