ஆசிரியர்கள்

அருப்புக்கோட்டையை பொருத்தமட்டுல வேதியல் பாடம்னா ஜெரால்ட் சார். கணிதம் பாடம்னா பால்ராஜ் சார். பௌதீகம் என்றால் இரத்தினசாமி சார். எந்த பள்ளிகூடத்துல படிச்சாலும் சரி TUTION போறது இவங்க கிட்ட தான்.

ஜெரால்ட் சார்கிட்ட ஒரே ஒரு நாள் மட்டும் தான் வகுப்புக்கு போனேன். வேதியல் ரொம்ப லேசான பாடம் அதுக்கு TUTION தேவை இல்லை. நாமலே படிச்சுக்கலாம்ன்னு ஒரு தைரியம் வந்ததால அதுக்கப்புறம் அவர் கிட்ட போகல. இன்னைக்கு அவர் பள்ளிக்குடம் நடத்திக்கிட்டு இருக்காருன்னு கேள்விபட்டேன்.

பால்ராஜ் சார் வேகத்துக்கு நம்மளால ஈடுகொடுக்க முடியாது கரும்பலகைல ஒரு பக்கம் எழுத ஆரம்பிச்சு அவர் மறுபக்கம் போவாரு. எழுதிக்கிட்டே அழிக்கிறாரா இல்ல அழிச்சுகிட்டே எழுதுராரானு தெரியாது. ஆனா Question bank ஒன்னு கொடுப்பாரு அத தாண்டி  பொதுத்தேர்வுல வேற கேள்வி வராது. "முக்காசோம்பேறி" அப்படீங்குற ஒரு நல்ல வார்த்தைய அறிமுகம் செஞ்சு வச்சாரு. இப்ப அவரு மாதா கோவில்ல போதகரா இருக்காருன்னு கேள்விபட்டேன்.

முதல் நாள் கிருஷ்ணசாமி சாரோட வகுப்புக்கு போனா கரும்பலகைல பாரதியார் இல்லாட்டி பாரதிதாசன் கவிதை ஒன்னு இருக்கும். நம்ம TIUTION நோட்டுல முதல் பக்கத்துல எழுதிக்கணும். சார் வந்ததும் எல்லாரும் சேர்ந்து அந்த கவிதைய படிக்கணும். அதுக்கப்புறம் பாடம் எடுக்கு துவங்குவாறு. English medium Tamil medium வித்யாசம் அவர் கிட்ட கிடையாது ரெண்டு மொழிலயும் சொல்லுவாரு. தொழில்நுட்பப வார்த்தைகள் இரண்டு மொழியிலயும் தெரிஞ்சுவச்சுக்கனும்னு நினைக்ககூடியவரு. இடை இடையே தற்கால அரசியல் பத்தி பேசுவாரு. அதுதான் highlight.

தமிழ் நாடு முற்ப்போக்கு எழுத்தாளர் சங்கம் ; கலை இலக்கிய இரவு மாதிரி நல்ல விசயங்கள அறிமுகப்படுத்துவாறு. சினிமாக்காரங்கன்னாவே அவருக்கு அம்ம்புட்டு கோவம் வரும். 

"ஒழுங்காய் பாடுபடு வயக்காட்டில்", இப்படி பாட்டு பாடுறான் சினிமாக்காரன். எந்த ஊருலையாவது வயக்காட்டுல ஆடி பாடி பார்த்ததுண்டா. அவனவன் வெயில்ல படாதபாடு பட்டு விவசாயம் பண்ணா, அதுக்கு தேவையான விலை கிடைக்குறது இல்லை. ஆனா சினிமாக்காரன் வரி ஏய்ப்பு செஞ்சுட்டு பகுமானமா பாடுறான்.

ரோட்டுல ஒரு செங்கல் இருந்தா அதுக்கு துணிய கெட்டி சாமி கும்புடுறாங்க இதெல்லாம் சரியானு கேப்பாரு. நம்ம நண்பன் வெங்கடேஷ் அவர நக்கல் அடிப்பான், "ஊருல இருக்க எந்த கோவிலையும் விட்டுவைக்காம அவரு சம்சாரம் கும்புடுது இவரு என்னடானா இப்படி பேசிகிட்டு திரியுறாரு"

ஆனா அவர பொருத்தமட்டுல சாமி கும்புடுரத அவர் கேலி பண்ணுனது இல்லை. திடீருன்னு ரோட்டுக்கு குறுக்கால கோவில் முளைக்குரத தான் அவரு நக்கல் அடிப்பாரு. குறிப்பா சாமி பேரவச்சு தப்புபன்னுறது அவருக்கு பிடிக்காது. பொறியியல் கல்லூரிக்கு மட்டுமே "Campus Interview" அப்படீங்குற மாயை உடஞ்சப்ப அவர் வேலை பார்த்த கலை அறிவியல் கல்லூரில "Campus Interview" நடந்துச்சு. 

இன்னைக்கு என்ன ஆசிரியர் தினமான்னு கேக்குறீகளா. ஒன்னுமில்லைங்க எங்க வாத்தியாருக யாவகம் வந்துச்சு. உங்க கிட்ட பகுந்துகிட்டேன்


 9 ஏப்ரல் posted in facebook.


தொடர்புடைய விவாதங்கள் மற்றும் கருத்துக்கள் காண இங்கே சொடுக்குங்கள்


https://www.facebook.com/photo.php?fbid=2991056895332&set=a.2070942373044.2104006.1229416405&type=1&permPage=1

No comments:

Post a Comment