பசும்பொன் முத்துராமலிங்க தேவர்


நீதிக்கட்சி சார்பாக வேட்பாளராக ராமநாதபுர அரசர் தேர்தலில் நிறுத்தப்படுகிறார். செல்வாக்கு மிக்க அரசரை எதிர்த்து தேர்தலில் நிற்க காங்கிரஸ் கட்ச்சியில் யாரும் முன்வரவில்லை. யாரை வேட்பாளராக நிறுத்துவது என்று காங்கிரஸ் கட்ச்சியில் பெரிய குழப்பம். அன்றைய AD HOC COMITTEE திகைத்து நின்றது.

அந்த தருணத்தில், இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அறியப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்கள் ஒரு முடிவு எடுக்கிறார்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்கள், அரசரை எதிர்த்து தேர்தலில் வேட்பாளராக போட்டியிடவேண்டும் என்று. யாரும் எதிர்பாராத வகையில் மாபெரும் வெற்றி பெற்றார் தேவர் பெருமகனார்.

காலத்தின் கோலம் பாருங்கள். நேதாஜியின் அரசியல் குரு சித்தரஞ்சன் தாஸ் அவர்களின் பேரில் அமைந்த சாலையில் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களுக்கு இருக்கும் சிலைக்கு இரண்டு அடி தூரத்தில் தேவர் அவர்களுக்கும் ஜனவரி எட்டாம் திகதி கொல்கட்டாவில் முழுஉருவ சிலை திறக்கப்பட்டது.

மறைந்தாலும் மாபெரும் தலைவர்களை பிரிக்க முடியாது.



9 ஜனவரி posted in Facebook

No comments:

Post a Comment