பொங்கல் வாழ்த்துக்கள்

தோழர்களே உறவுகளே

எம்மை தோழனாய் உறவினனாய் ஏற்றுக்கொண்டு
உங்கள் இன்பத்தையும் துயரத்தையும் பகிர்ந்துகொண்டீர்கள்.
உங்கள் இன்பம் என்னையும் தொற்றிக்கொண்டது

துயரம் என்பது கைரேகை போன்றது
இரக்கமும் அவமானமும் ரெட்டை கிளவி போன்றது.

உங்கள் இன்னல்கள் கேட்டு இரக்கபட்டதில்லை 
மாறாக பெருமைபட்டிருகிறேன்
உங்களின் மதுகையை நிரூபிக்க கிடைத்த வாய்ப்பை
பயன்படுத்திக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையினால்

நம்மில் சிலருக்கு இன்று பொங்கல்
சிலருக்கு பொங்கலோடு புத்தாண்டும் உண்டு

உழவுக்கு துணையான இயற்கைக்கும் கால்நடைகளுக்கும்
அவைதந்த எருதுக்கும் நன்றி தெரிவிக்கும் இந்நாளில்
நகரமென்னும் நரகத்தில் கைதிகளாய் வாழ்ந்திடுவோர் அனைவரும்
நன்றி தெரிவிப்போம் உழவர்களுக்கு
மற்ற நாட்களில் PLOT போடலாம்.

"நேர்மையாய் எடுக்கும் முயற்ச்சிகள் மூலம்
இந்த திருவள்ளுவர் ஆண்டின்
எல்லா நாளையும் மனம் நிறைந்த நாளாக
உருவாக்கிட வாழ்த்துகிறேன்"

No comments:

Post a Comment