கூடங்குளம் : போர் முறை.

கொங்கு நாட்டில் நாற்ப்பதாயிரத்துக்கும் மேற்ப்பட்ட தொழிற்ச்சாலைகள் சேர்ந்து போராட்டம் நடத்துகிறார்கள்.

சில தொலைக்காட்ச்சிகளின் செய்திகள் அதனை, "மின்வெட்டுக்கெதிரான போராட்டம்" என்று கூறுகின்றன. மற்றும் சில தொலைக்கட்ச்சிகளின் செய்திகள், "கூடங்குளம் அனுவுலைக்கு ஆதரவான" போராட்டம் என்று கூறுகின்றன.

அங்கிருப்பவர்களிடம் கேட்டால் அவர்கள் சொல்வது என்ன, "வெளி மாநிலங்களில் இருந்து ORDER எடுத்து வேலை செய்ரோமுங்க. இப்ப தினம் GENERATOR வச்சு வேலை பார்த்தாதான் வேலைய முடிச்சு கொடுக்க முடியுது. இப்படியே போச்சுனா வெளிமாநிலத்துல இருந்து ORDER எடுக்குறத நாங்க நிருத்தியாகோனும். அந்த வேலை எல்லாம் வேற மாநிலத்துக்கு போய்டும் அப்பறம் நாங்க திரும்ப ORDER புடிக்க எந்த ஊருக்கு போறதுன்னு தெரியல. கூடங்குளத்த தொரப்பிங்கலோ வேற எத தொரப்பிங்கலோ தெரியாது எங்களுக்கு மின்சாரம் வேண்டும்னு சொல்லுறத தவிர வேற வழி தெரியல."

அரசாங்கமும் வேலை வாய்ப்பை உருவாக்குவது இல்லை. வேலைவாய்ப்பை உருவாக்குரவங்களையும் வருத்தி எடுக்குது.

எதிராளியின் பலவீனத்தை பயன்படுத்துவதென்பது போர்முறைகளில் ஒன்று. நடப்பதை பார்த்தால் மக்கள் மீது அரசாங்கள் மீண்டும் மீண்டும் போர் தொடுப்பதாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.



29 பிப்ரவரி
posted in Facebook

No comments:

Post a Comment