திராவிட இயல்பு



முன்னுரை : ரே பள்ளிக்கூடத்தில் ; ஒரே வகுப்பில் ; ஒரே மேசையில் அமர்ந்து ஐந்தாம் வகுப்பு வரை படித்துக்கொன்றிருக்கும் இரண்டு பிள்ளைகளை பிரித்து வெவ்வேறு வகுப்புகளில் அல்லது வெவ்வேறு பள்ளிகளில் சேர்த்தால் இரண்டு குழந்தைகளின் நெஞ்சமும் வாடும். நான் ஒரு பாடத்தை படிக்கிறேன், என் நண்பன் வேறு ஒரு பாடத்தை படிக்கிறான். நாங்கள் இருவரும் வெவ்வேறு திசைகளில் சென்றுவிட்டோம் என்று அவர்கள் நினைக்ககூடும். வெவ்வேறு நண்பர்களோடு ஒன்றுகூடியிருப்பார்கள்.

கால மாற்றத்தில் இருவரும் வளர்ந்து வெவ்வேறு கல்லூரிகளில் படித்து வெவ்வேறு அலுவலகங்களில் வேலை பார்த்து, ஐம்பது வருடம் கழித்து  பழைய மாணவர்கள் ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் மீண்டும் பார்த்து வெகுநேரம் பேசி பிரியும்போது   அவர்களுக்கு ஒரு உண்மை புலப்படும். "வகுப்பறை ; பள்ளிக்கூடம் ; கல்லூரி ; வாசகங்கள் என்பவை வெவ்வேறாக இருந்தாலும் இருவரும் ஒரே பாடத்தை தான் வெவ்வேறு திசைகளில் படித்திருக்கிறோம்."

சம்பவம் : திருவாசகத்துக்கு இசையமைத்த இளையராஜா, நாத்திகரான ஈ.வே.ராமசாமி நாயக்கருக்கு இசையமைக்க மறுத்துட்டாராம்.

அதனால, சமீபத்துல யுவன்சங்கர் ராஜா ஒரு முகமதியரை திருமணம் செய்துகொண்டது இளையராஜாவுக்கு நல்ல பாடமாம். இளவு வீட்டுல கூட அரசியல் செய்யும் திராவிடர்கள் சொல்லுகிறார்கள். 

யுவன் மதம் மாறிய விடயமானது எந்த வகையில் இளையராஜாவுக்கு வீழ்ச்சி?

யுவன் சங்கர் ராஜா மதம் மாறி, ஒரு முகமதியரை திருமணம் செய்து கொண்டதை பற்றி ஆத்தீகர்கள் அதிகம் பேசவில்லை. வேறு பள்ளிக்கூடத்தில் சேர்ந்துவிட்ட நண்பன் என்ற அளவில் வாழ்த்துக்கள் சொல்லியிருகிறார்கள். சாபம் கொடுக்கவில்லை. 

ஒருவேளை, "எனக்கு இறை நம்பிக்கையே கிடையாது" என்று சொல்லி திராவிடர்களின் முறையில் சுயமரியாதை இல்லாத திருமணத்தை யுவன் செய்திருந்தால் இறைநம்பிக்கை உடைய இளையராஜாவுக்கு அது ஒரு வீழ்ச்சி என்று எடுத்துக்கொண்டிருக்கலாம். அப்படி எதுவும் நடக்கவில்லையே....

இந்த நிகழ்வை இளையராஜாவின் வீழ்ச்சி என்று கொண்டாடும்   திராவிடர்களின் போக்கை எவ்வாறு எடுத்துக்கொள்வது?

கோவணாண்டி : என் படத்துக்கு நீ இசையமைக்கலையா, உன் வம்சமே விளங்ககூடாதுன்னு நினைக்குற குரூர புத்தி, திராவிடர்களுக்கு எதுக்கு இருக்கு? அப்படியென்றால் இந்து மதத்தை விட இஸ்லாத் மதம் தாழ்வான மதம் என்று கருதுகிறார்களா?

திராவிடர்களின் பதில் : இல்லை, நாங்கள் அப்படி நினைக்கவில்லை,  கடவுளை மறுக்காவிட்டாலும் கூட, சிறந்த மதம் என்று நாங்கள் நினைக்கும் இஸ்லாத்துக்கு யுவன் மாறியிருப்பது என்பது யுவனுக்கும் எங்களுக்கும் எழுச்சி இளையராஜாவுக்கு வீழ்ச்சி என்று கருதுகிறோம். இஸ்லாத்தையோ கிருத்தவத்தையோ என்றைக்காவது நாங்கள் நிந்தித்திருக்கிரோமா? ஏடாகூடமாக கேள்வி கேட்டு எங்கள் பிழைப்பில் மண்ணை அள்ளிப்போட்டுவிடாதீர்கள்.

ஆனால் யுவன் சங்கர் ராஜா போன்று பெற்றோரை காயப்படுத்தும் நமக்கெல்லாம் ஒரே ஒரு வார்த்தை தான்.

பெற்றோரை காயப்படுத்தும் பிள்ளை எவ்வளவு உயரத்தை தொட்டாலும் ரணமில்லாத தூக்கத்தை ஒரு இரவு கூட பெற முடியாது. இந்த உண்மையை தெரிந்துகொள்ள யுவன் வேறு எங்கும் போகவேண்டியது இல்லை. அவருடைய புதிய சேத்தாளி வைரமுத்து கிட்டயே கேட்டுக்கலாம்.

~~~ உள்ளத்தில் ரணமிருந்தால் உறவுகள் மலர்வதில்லை ~~~~

No comments:

Post a Comment